Skip to main content

Posts

Showing posts from July, 2024
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம்  வருடம் 2034 இடம்: பெங்களூரு. கடிகாரம் பிற்பகல் மூன்று மணி என்றுரைக்க, அதனை மறுத்த வானம் மாலை ஆறு மணி என ஏமாற்றியது. மேகங்கள் மேவிய வானிலையை விழிகளில் ரசனையேற்றிப் பார்த்திருந்தாள் சந்தனா. பிரபல துணிக்கடையையொட்டி, தமிழிலும் கன்னடத்திலும் ஸ்ருதி நாட்டிய நிருத்தயாலயா என்று எழுதியிருந்த கட்டிடத்தின் வெளிவாசலில் இருந்த மகிழம்பூ மரத்தினடியில் நின்றிருந்தாள்.  அவள் தனக்கு வலப்புறத்தில் சற்று தள்ளி காரை நிறுத்திவிட்டு இறங்காமல் ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஏறக்குறைய ஐந்து நிமிடங்களாக அவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.  தலைமுடியை இறுக்கமாகப் பின்னியிருந்தாள். அது ‘ஃப்ரென்ச் ப்ளாட்’ என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. காதில் பெரிய ஸ்டட்! கழுத்தில் ஒன்றுமில்லை. மகிழம்பூ மரத்தினடியில் தூய வெண்மையும் இளநீலமுமான உடையில், அடிக்கும் ஈரக்காற்றில் துப்பட்டா பறக்க நின்று, மேகங்களில் லயித்திருந்தவள் அவன் கண்களுக்கு ஓர் அழகிய மேகத்துணுக்காகவே தெரிந்தாள். அந்த அழகிய மேகத்தினுள் புதைந்துக்கொள்ளும் ஆசை வந்தது. ‘அழகா இர...

மழை

மழை அன்று! தா கம் தாகம் என்று தவித்துக்கிடந்த நிலத்தின் வயிற்றை பெருமளவில் நிரப்பியிருந்தது, அன்றைய மழை! பள்ளிமுடிந்ததும் வகுப்பிலிருந்து வெளிவந்த மாணவர்கள் மைதானத்தில் இடுப்புவரை தேங்கியிருந்த செம்பழுப்பு தண்ணீரைப் பார்த்து உற்சாகமானார்கள். புத்தகப்பையை தலைமேல் தூக்கிக்கொண்டு ஓடியும் குதித்தும் சென்றுகொண்டிருக்கையில், ஐந்தாம்வகுப்பு பையன் ஒருவன் தொப்பென்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டான். அவன் புத்தகமூட்டை ஒருபுறமும், சாப்பாட்டுக்கூடை ஒருபுறமும் ஜலக்கீரிடை செய்தது. சற்றுமுயன்றால் மேலேறி வந்துவிடும் அளவிலான தண்ணீர்தான்! ஆனால் உயரம் குறைவாயிருந்த பையன் பயத்தில் மேலும் வழுக்கி விழுந்து, மூச்சுக்கு திணறினான். செத்துதான் போக போகிறோம், இனி உம்மாவின் தேங்காய் சாதத்தை ருசிக்க முடியாது, வாப்பாவின் தாடி அழுந்தும் முத்தம் கிடைக்க பெறாது என்றெல்லாம் நினைவுக்கிடங்கோடு அலைக்கழிந்து கொண்டிருந்தவனை, சட்டென்று ஒரு பிஞ்சுக்கரம் பிடித்து மேலிழுத்தது. இழுத்தக் கையோடு நுழைவாயில் வரை அழைத்தும் சென்றது. அதன்பின்னரே சிறுவன் ஆசுவாசமடைந்து புன்னகைத்தான். "தாங்க்ஸ் அண்ணா. என் புத்தகப்பை?" "என்கிட்...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.