கருவறை கீதம் -9
அத்தியாயம் 9 வருடம் 2004 அ னுராதாவிற்கு அந்த வீட்டில் ஆறு மாதங்கள் நரகமாகக் கடந்திருந்தது. பாஸ்கரன் தவிர யாரும் அவளோடு பேசுவதில்லை. இவளை முற்றிலும் வேற்று மனுதியாக நடத்தினார்கள். பாஸ்கரனின் பொருட்டு மட்டுமே அவளுக்கு அவ்வீட்டில் இடமளிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக பாஸ்கரனைச் சேர்த்து அவர்களுக்கு மட்டும் சமைத்துக் கொள்வது. இவளுக்கு வேண்டுமானால் அவளே சமைத்துக் கொள்ளவேண்டும். முன்பும் விடுமுறை நாட்களில் மாமியாருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தவள்தான். ஆனால் தற்போது தினமும் காலை மற்றும் மதிய உணவு சமைத்துவிட்டு, வேலைக்கு புறப்படுவதென்பது அவளுக்கு சிரமமே! சில நாட்கள் சாப்பிடாமல் போய்விடுவாள். விடுமுறை நாட்களில் மற்ற வீட்டு வேலைகளிலும் அவளைப் பங்கேற்க விடுவதில்லை. அவர்கள் ஒவ்வொரு செயலிலும், ‘நீ வேற்று மனுதி’ என்று உணர்த்தும்போது கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். அப்போதெல்லாம் மாமனாரை நினைத்து வைராக்கியத்துடன் தாடையை உயர்த்தி நிற்பாள். அனைத்தும் அவரின் ஆணைகள் தான் என்று புரிந்ததால், அவரை வென்று, இந்த வீட்டில் தன் குழந்தைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவதில் தீவிரமாக இருந்தாள் அனு. ஆனால் அங்கே தி