Posts

Showing posts from July, 2024

கருவறை கீதம் -9

Image
  அத்தியாயம் 9 வருடம் 2004 அ னுராதாவிற்கு அந்த வீட்டில் ஆறு மாதங்கள் நரகமாகக் கடந்திருந்தது. பாஸ்கரன் தவிர யாரும் அவளோடு பேசுவதில்லை. இவளை முற்றிலும் வேற்று மனுதியாக நடத்தினார்கள். பாஸ்கரனின் பொருட்டு மட்டுமே அவளுக்கு அவ்வீட்டில் இடமளிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக பாஸ்கரனைச் சேர்த்து அவர்களுக்கு மட்டும் சமைத்துக் கொள்வது. இவளுக்கு வேண்டுமானால் அவளே சமைத்துக் கொள்ளவேண்டும். முன்பும் விடுமுறை நாட்களில் மாமியாருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தவள்தான். ஆனால் தற்போது தினமும் காலை மற்றும் மதிய உணவு சமைத்துவிட்டு, வேலைக்கு புறப்படுவதென்பது அவளுக்கு சிரமமே! சில நாட்கள் சாப்பிடாமல் போய்விடுவாள். விடுமுறை நாட்களில் மற்ற வீட்டு வேலைகளிலும் அவளைப் பங்கேற்க விடுவதில்லை‌. அவர்கள் ஒவ்வொரு செயலிலும், ‘நீ வேற்று மனுதி’ என்று உணர்த்தும்போது கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். அப்போதெல்லாம் மாமனாரை நினைத்து வைராக்கியத்துடன் தாடையை உயர்த்தி நிற்பாள். அனைத்தும் அவரின் ஆணைகள் தான் என்று புரிந்ததால், அவரை வென்று, இந்த வீட்டில் தன் குழந்தைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவதில் தீவிரமாக இருந்தாள் அனு. ஆனால் அங்கே தி

கருவறை கீதம் -8

Image
  அத்தியாயம் 8 வருடம் 2003 ஒரு வீட்டின் அருளும் இருளும், நிம்மதியும் நிர்கதியும், ஆனந்தமும் அனர்த்தமும், அவ்வீட்டு மனிதர்களின் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. அவ்வகையில் தற்போது பாஸ்கரனின் வீடு துக்கம் நடந்த வீட்டைப் போல் அருளற்று இருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரின் களையிழந்த முகத்தைக் கண்டு நடந்ததை ஊகிக்க முடிகிறது. பேரப் பிள்ளையைக் கேட்ட பெரியவர்களுக்கு, இளைய தம்பதியர் தாங்கள் கண்டறிந்த மாற்றுப்பாதையும் அதற்கு அவர்கள் மேற்கொண்ட வழிமுறையும் அது தற்போது வெற்றிக்கரமான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதையும் வீட்டில் சொல்லிவிட்டார்கள் என்று தெரிகிறது. பாஸ்கரன் இறுகிப் போய் நின்றிருந்தான். அனுராதாவின் முகம் அழுதழுது வீங்கி சிவந்திருந்தது. அடித்திருக்கிறார்கள் என்று அவள் கன்னத்தில் பதிந்திருந்த விரல் ரேகைகள் சொல்கிறது. காரணம், அவளருகே அவளின் அம்மா லட்சுமி. பாஸ்கரனின் வாரிசு வெற்றிகரமாக மூன்று மாதங்களைக் கடந்ததையடுத்து, நிர்மலமாக விடிந்த ஒரு விடுமுறை நாளில், அனைவரும் கூடத்தில் கூடியிருந்த வேளையில் பாஸ்கரன் விடயத்தை மெதுவாக ஆரம்பித்து, உறுதியுடன் சொல்லி முடித்துவிட்டான். வீட்டுப் பெரியவர்கள் மூவர்

கருவறை கீதம் -7

Image
  அத்தியாயம் 7 வருடம் 2003 பா ஸ்கரனின் தங்கை நிர்மலா அன்று அம்மா வீட்டிற்கு சீராட சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் வந்திருந்தாள். அவளின் பூரித்த முகமும் தேகமும் கணவன் வீட்டில் அவள் வாழும் நல்வாழ்க்கையைப் பறைசாற்றியது. வரவேற்பு, மாப்பிள்ளை உபச்சாரம் எல்லாம் முடிந்ததும் மெல்ல வந்த விடயத்தைச் சொன்னாள் நிர்மலா. “நாள் தள்ளி போயிருக்குதும்மா. நேத்து தான் டாக்டர்கிட்ட போய் கன்ஃபர்ம் பண்ணிட்டு வந்தோம்.” “நல்ல சேதி சொன்னே!” என்ற சித்தி அவள் வாயில் சர்க்கரையை அள்ளிப் போட்டார். “எத்தனை நாளுடி?” “நாப்பத்தஞ்சு நாள் ஆகுது சித்தி.” “அப்புறம் ஏன் இவ்ளோ தூரம் டிராவல் பண்ணி வரணும்?” “ட்ரெய்ன் தானேம்மா. எனக்கு உன் கைல சாப்பிட ஆசைன்னு சொன்னேன். அதான் கூட்டிட்டு வந்தார்.” “சந்தோஷம்டி! இதைத்தான் நல்லது நடந்தா வரிசையா நடக்கும்ன்னு சொல்லுவாங்க.” -மங்கை. “வரிசையாவா?” “ம்ம் ம்ம்! உன் அண்ணிக்காரி நம்ம வழிக்கு வந்துட்டா இல்ல?” -சித்தி. மகிழ்ச்சியில் விரிந்தது நிர்மலாவின் கண்கள். “அம்மா?” “எல்லாம் உங்கப்பாதான்! பாஸு அவர் பிள்ளையே இல்லன்ற மாதிரி அவனையும் அவளையும் தள்ளி வச்சிட்டாரு. எங்க பையனை எங்கக்கிட்டே இருந்து பிரிச்

கருவறை கீதம் -6

Image
  அத்தியாயம் 6 வருடம் 2003 அ ன்று கோவிலுக்கு போய்விட்டு வீடு திரும்பியிருந்தனர் பாஸ்கரனும் அனுவும். பாஸ்கரன் தனிப்பட்டு ஒரு பெரிய நிறுவனத்திற்கு வருமானவரி கணக்கு தீர்த்து தந்தமைக்காக, ஒரு பெரிய தொகையைச் சம்பளமாக பெற்றிருந்தான்.  அதில் சேமிப்பிற்கும் செலவிற்கும் போக மீதத் தொகையை வழக்கம்போல் அப்பாவிடம் கொடுக்க, “போய் சேர்ற காலத்துல எனக்கெதுக்குப்பா இதெல்லாம்?” என்றார் விட்டேற்றியாக! “என்னப்பா பேச்சு இது? நான் எப்பவும் என் செலவுக்கு போக மிச்சத்தை உங்கக்கிட்ட தானே தருவேன்?” “ஹ்ம்ம்! அப்போ எல்லாம் என் வம்ச வாரிசுக்காக பிற்காலத்துல பயன்படும்ன்னு சேர்த்து வச்சு மனை வாங்கிப்போடுவேன். இங்கேதான் எனக்கு அதுக்கு கொடுப்பினை இல்லைன்னு ஆகிடுச்சே? அப்புறம் நான் யாருக்காக இதெல்லாம் சேர்க்கணும்?”  “ஏன்ப்பா இப்டி? எத்தனை முறை சொல்றது நீங்க சேர்க்கறதை அனுபவிக்க நிச்சயம் உங்க பேரன் வருவான்.” “அதை அவன் வரும்போது பார்ப்போம் பாஸு.” என்றவர் உறுதியாகப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அப்பாவின் கோபமும் பிடிவாதமும் இவனை எரிச்சலுற செய்தது. அம்மாவை விட இவர்தான் மாமியார் போல் நடந்துகொள்கிறார். தன்னிடமே இப்படி அலட்சியம