கருவறை கீதம் -23
அத்தியாயம் 23 “மீ ட் அவர் சித்திப்பாட்டி.” என்ற அவினாஷ், காமாட்சியிடம் சொன்னான். “பாட்டி, திஸ் இஸ் அக்னிஸ்வரூப்! பிரகதியோட அண்ணன்.” அவரை வணங்கிய அக்னியை, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தபடி அளக்கும் பார்வைப் பார்த்தார் காமாட்சி. அக்னிக்கு உள்ளே அடித்துக்கொண்டது. எங்கே அனுவைப் போல், சந்தனாவைப் போல் இவரும் தன்னை அடையாளம் காண முயல்வாரோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால் தள்ளாமையிலும் உடல்நல பழுதிலும், நினைவாற்றலும் பார்வையும் மங்கியிருந்த காமாட்சிக்கு பாஸ்கரனின் கண்கள் எல்லாம் எங்கே நினைவிருக்கப் போகிறது? ஆகையால் மரியாதை நிமித்தம் தன்னை நமஸ்கரித்த அக்னியைத் தானும் வணங்கி, பொய்ப் பற்கள் தெரிய சிரித்தார். “ராஜா கணக்கா இருக்கீங்க தம்பி!” ‘ஆமாம்டா கண்ணா, சாக்கடைல தவறி விழுந்த உன்னைத் தூக்கி குளிப்பாட்டி, சந்தனம் பூசி வாசமா வச்சிக்க நினைக்கறா உங்கம்மா’ பல்லைக் கடித்துக்கொண்டு சின்னதாய்ப் புன்னகைத்தான். “சாப்பிட போங்க பாட்டி.” அதிக அலைச்சல் ஆகாத காமாட்சியின் உடல்நிலையின் பொருட்டு, அவரை இன்றுதான் அழைத்து வந்திருந்தான் பாஸ்கரன். மூளை சிறிதும் ஓய்வில்லாமல் தவித்திருத்த நிலையில், அவரின் வருகை இ