கருவறை கீதம் -24

 


[இந்த அத்தியாயத்துல only convo தான். படிச்சிட்டு சொல்லுங்க🙂🙂 ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கருத்து சொல்ற அந்த நல்ல உள்ளத்துக்கு ஸ்ரீயின் நன்றிகள் 💌💌]


அத்தியாயம் 24


றுநாள் காலையில் அன்றைக்கான உணவுப் பட்டியலைப் பார்வையிட்டு, உணவினைச் சுவைத்து, ‘கேட்டரிங் ஹெட்’இடம் பேசி சிற்சில மாறுதல்களைச் சொல்லிவிட்டு, அந்த சமையல் கூடத்திலிருந்து தன் விறுவிறு நடையில் வெளியே வந்த அக்னிஸ்வரூபனை, “அண்ணா!” என்ற அழைப்பு இழுத்து நிறுத்தியது.


விழி திருப்பிப் பார்க்க, காரிடாரின் தூணில் சாய்ந்து மார்பின் குறுக்கே கைக்கட்டி நின்றிருந்தான் அர்ஜூன். அவனைக் கண்டதும் இவன்‌ பார்வையில் அழுத்தம் ஏறிக்கொண்டது. “சொல்லுங்க அர்ஜூன்.”


“பாவனாவை என்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கீங்க போல!” நேரடியாகவே கேட்டுவிட்டான் அவன்.


‘கொழுப்பைப் பாரேன்!’


“எஸ்!”


“பட் ஐ லவ் ஹர்!”


‘என்ன நெஞ்சழுத்தம் இவனுக்கு!’


“ஸீ அர்ஜூன்… அவினாஷோட கஸின்றதால சும்மா இருக்கேன். இல்ல…”


“ஓ! அவினாஷ் கஸின்? சரிதான்!” 


அவனின் எள்ளலில் அக்னியின் மனதில் அலாரம் அடிக்க, கண்கள் சுருங்கியது. கடினக்குரலில் கடுமையுடன் சொன்னான். “அவ இன்னஸென்ட்! சின்னப் பொண்ணு. லவ்ன்ற பேர்ல அவ மனசைக் கெடுக்காதீங்க! பாருங்க நான் பேச வேணாம்னு சொன்னதையும் கூட உங்கக்கிட்ட சொல்லிருக்கா!”


“ஹான் ஹான்! சொன்னதுனால அவ சின்னப் பொண்ணுன்னு அர்த்தமில்லை. அந்தளவுக்கு என்னை நம்புறான்னு அர்த்தம்!”


“ஆனா அந்த நம்பிக்கையை நீங்க காப்பாத்தற மாதிரி தெரியலையே…”


நேற்றிரவு மொட்டைமாடியில் சந்தனாவிடம் பேசியதில் மனதின் வெம்மைகள் தணிந்து லேசானதைப் போல் உணர்ந்தான் அக்னிஸ்வரூபன். அதே லேசான மனதுடனே கீழிறங்க, படிக்கட்டை ஒட்டிய அறையின் ஜன்னலில் ஏதேச்சையாக விழி திருப்புகையில் அர்ஜூன் பாவனாவை முத்தமிட்டதைப் பார்த்திருந்தான். அப்போதே கத்தி அழைத்து அவன் தாடையை உடைத்துவிடும் வேகம் வந்தது. 


இருக்கும் சூழ்நிலை கருதியும் இவன் பின்னால் சந்தனா வந்ததாலும், அர்ஜூனைப் பற்றி கேள்விப்பட்ட வரையில் நன்மதிப்பு சான்றிதழே கிடைத்திருந்ததாலுமே, பாவனாவை முத்தமிட்ட பின்னும் இன்று அர்ஜூன் முழுதாக இவன் முன் நிற்கின்றான்.


முதலில் அனுவைப் போல் அர்ஜூனையும் நேரில் காணும் ஆவல் உள்ளுக்குள் இருந்ததுதான். ஆனால் பார்த்த பின்பு அவன் சந்தனாவை ஈஷிக் கொண்டே இருந்ததில் அவன் மேல் கோபம்தான் வந்தது. பின்னர் அவளை அண்ணி என்றழைத்ததைக் கேட்டதையடுத்து இருவர் மனதிலும் காதலில்லை என்று தெரிந்தபின், அவர்களின் நெருக்கம் முன் போல் இவனைப் பாதிக்கவில்லை. சிறு வயதிலிருந்து தொடரும் தோழமை என்ற புரிதல் இருந்தது.


இருப்பினும் தன் வீட்டுப் பெண்ணிடம் காதல் என்ற பெயரில் ஒன்றி நிற்பவனிடம் இன்னும் சிறு புகைச்சல் இருக்கவே செய்கிறது. அதுதான் இப்போது அதிருப்தியாக வெளிப்படுகிறது.


ஆனால் அர்ஜூன் உறுதியாக சொன்னான். “அவளுக்கு மட்டுமில்ல; உங்களுக்கும் என் மேல இருக்கற நம்பிக்கையை நான் எப்பவும் ஸ்பாயில் பண்ற மாதிரி நடந்துக்கமாட்டேன். ஐ க்நோ மை பவுண்டரீஸ்!”


“ஃபைன்!” என்றவன் விருட்டென நகர,


 “அண்ணா!” என மீண்டும் அழைத்தான் அர்ஜூன்.


அந்த அழைப்பில் வித்தியாசத்தை உணர்ந்த அக்னியின் கண்களில் கூர்மை ஏறியது. வேண்டுமென்றே, “சொல்லுங்க ப்ரோ!” என்றான்.


“அர்ஜூன்!” என்றதில் அவன் குரல், ‘பேரைச் சொல்லி கூப்பிடுடா வெண்ண!’ என்றதாக ஒலித்தது.


அவனை விட படு அமர்த்தலாக, “இதைச் சொல்லத்தான் கூப்பிட்டீங்களா? உங்கப் பேர்தான் ஏற்கனவே எனக்கு தெரியுமே?” என்று சொல்லிவிட்டு நகர முற்பட, வழிமறித்தான் இளையவன்.


“நீ யாருன்னு எனக்கு தெரியும். நான் யாருன்னு உனக்கும் தெரியும். அப்புறம் எதுக்குண்ணா இந்த கண்ணாமூச்சி விளையாட்டு?” ஒருமையில் அழைப்பதற்கு அக்னி அடித்துவிடுவானோ என்ற அச்சம் இருக்கவே செய்தாலும், முயன்று வீராப்பை விடாமல் பேசினான்.


அர்ஜூன் தன்னை மோப்பம் பிடித்துவிட்டானென அக்னிக்கு புரிந்து போனது. தம்பி தன் மீது உரிமை எடுத்துக் கொள்வதில் மனதில் சில்லென்ற சாரல் விரவுவதைத் தவிர்க்க இயலவில்லை இவனுக்கு. அதே உல்லாசத்துடன் பேசினான். “ஆமா, நான் அக்னி; நீங்க அர்ஜூன்! இதுல விளையாட என்ன இருக்குது?”


“சோ? நீ ஒத்துக்க போறதில்ல இல்ல?”


“இல்ல புரியல. எதை ஒத்துக்கணும்ன்னு சொல்றீங்க?”


“எனக்கு ஒரு அண்ணன் இருந்தான். ஃபாரின்ல இருக்கான்னு உன்கிட்ட சொல்லிருப்பாங்க. அது பொய்!”


இதை ஏன் என்னிடம் சொல்கிறாய் என்பதாகப் பார்க்க, “அவன் இங்கேதான் பெங்களூருல இருக்கான். இப்போ என் முன்னாடி நிற்கறான். ஆனா இப்போ அவன் உண்மையை ஒத்துக்கலைன்னா, அவன் உயிரோட இல்லைன்னு ‘எங்க’ அம்மா கிட்ட சொல்லிடலாம்ன்னு இருக்கேன்.” என அலட்சியமாகச் சொன்னான் அர்ஜூன்.


‘உங்க அம்மாவா?’


பல்லைக் கடித்த இவனுக்கு கண்கள் சிவந்தது. எனக்கும் அவர் அம்மாதான் என எதிரிலிருப்பவனின் சட்டையைக் கிழித்துவிடும் ஆவேசம் கிளம்பியது. 


‘என்னத் திண்ணக்கம் இருந்தா முழுசா முன்னாடி நிற்கற என்னைச் செத்துப் போயிட்டேன்னு சொல்லுவ?’


இவன் அவனுக்கு அண்ணனல்லவா? தம்பி தன்னைத் தூண்டிவிடுகிறானென புரிந்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அழுத்தமாக நின்றிருந்தான்.


அர்ஜூன் சற்றுநேரம் பொறுத்து பார்த்தான். அக்னி அவ்விடம் விட்டு அகலவுமில்லை; இவன் சொல்வதை மறுக்கவுமில்லை.


மெச்சுதலாக இதழ் வளைத்தான் இளையவன். “ஓகே! நமக்குள்ள ஒரு டீல் வச்சிக்கலாம். நீயே ஆமான்னு ஒத்துக்கிட்டா… நீதான் என் அண்ணன்… ஐ மீன் என்னோட ப்ளட் சிப்லிங்’ன்னு நான் யார்க்கிட்டேயும் சொல்லமாட்டேன். அதுலேயும் எனக்கு ஒரு ஆப்ளிகேஷன் இருக்குது. அதை அப்புறம் சொல்றேன். அப்டி நீ ஒத்துக்காத பட்சத்துல, எல்லார்க்கிட்டேயும் போய் எவிடென்ஸோட சொல்லுவேன். முக்கியமா அவி அத்தான் அண்ட் பிரகதி! இதுக்கு மேல இந்த கல்யாணம் நடக்கட்டுமா வேணாமான்னு அவங்க முடிவு செஞ்சுக்கட்டும். முடிஞ்சா தடுத்துப் பாரு மை டியர் சஞ்சுண்ணா! என்ன டீலுக்கு ஒத்துக்கறியா?”


கொஞ்சமும் அசராமல் சற்று கடுமையாகவே சொன்னான் இவன். “நீங்க என்ன பேசறீங்கன்னு எனக்கு புரியல. பட் வன் திங்க்… இது நீங்களும் உங்க கசினும் விளையாடற விளையாட்டு இல்ல மிஸ்டர் அர்ஜூன்! கல்யாணம்! இந்த கல்யாணத்துல ஏதாவது கலாட்டா நடந்தா உங்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன். என் தங்கச்சி சந்தோஷத்துக்காக எவ்ளோ வேணாலும் இறங்கி அடிப்பேன்.”


உள்ளுக்குள் அல்லுவிட்டது அர்ஜூனுக்கு. இருந்தும் அலட்டிக்கொள்ளாமல் சொன்னான். “வார்ரே வாஹ்! சோ பிரகதிதான் என்னோட ட்ரம்ப் கார்ட்?”


“அர்ஜூன்!” -கர்ஜனைக் குரல்.


“சொல்லுடா அண்ணா.” என்றான் காதைச் சுண்டுவிரலால் குடைந்துகொண்டு!


அவனின் அசராத பாவனையில் இவனுக்கு புன்னகை முகிழ்க்க பார்த்தது. “உன்னால முடிஞ்சதைப் பாரு! நீ என்ன செஞ்சாலும் இந்த கல்யாணம் நடந்தே தீரும்!”


“நான் உன் வீட்டு பொண்ணைத் தூக்கினா கூடவா?”


இப்போது அவன் சட்டையைப் பிடித்துவிட்டான் அக்னி‌. “பிரகதி மேல கை வச்ச…”


இவர்களை ஓரிருவர் பார்த்து அருகே வரப் பார்க்க, “என்னை விட ரொம்ப கோவக்காரனா இருப்ப போலவே?” என்று சிரித்தவாறே சட்டையை விடுவித்துக் கொண்ட அர்ஜூன், வெளிப்புறம் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்த நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டு கேட்டான். “பிரகதி மேல கை வச்சு அவி அத்தானைப் பகைச்சிக்க நானென்ன கிறுக்கனா?” 


இவனும் அவன் பின்னாலேயே போய் அவனெதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தான். “பி பின்ன? வேற யாரு? பாவனாவா?”


“ச்சச்ச… அவ என்னோட தேவதை! நான் தூக்கறேன்னு சொன்னது அபிராமி பாட்டியை!”


“டேய்…”


“என்ன? அவங்களும் உன் வீட்டு பொண்ணுதானே?”


அவன் அடிக்கும் லூட்டியில் கிறுக்குப் பிடித்தது அக்னிக்கு. “அர்ஜூன் ப்ளீஸ்! இந்த பிரச்சினையை இத்தோட விட்டுடு!”


“நெவர்! நீதான் என் அண்ணன்னு ஒத்துக்கோ! நாம ஃப்ரெண்ட்ஸ் ஆகிடலாம்.”


இனி அவனிடம்‌ உண்மையை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லையே! நெடுமூச்சொன்று கிளம்பியது. “கல்யாணம் முடிஞ்சதும் ரிவீல் பண்ணலாம்ன்னு இருந்தேன். ஆல்ரைட்! உனக்கு இந்த மேட்டரை யார் சொன்னது?”


“இந்த ஃபேமிலி ட்ரீ எக்ஸ்கவேஷன்லாம் நீ மட்டும்தான் பண்ணுவியா?”


தம்பி தன்னை நோக்கி இமைக்காமல் கேட்கும் பாவனையில், ஆரம்பத்திலேயே அவனுக்கு தன்னைத் தெரிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான் அக்னிஸ்வரூபன்.


அக்னி அவினாஷ் குடும்பத்தார் பற்றி விசாரித்த அதே நேரத்தில், இங்கே அர்ஜூனும் பிரகதி வீட்டாரைப் பற்றி ஆய்வு செய்திருந்தானல்லவா? 


இல்லையென்றாலும் இன்னும் ஒரே மாதத்தில் அர்ஜூன் தன் அண்ணனை, அவினாஷின் உதவியுடன் கண்டறிந்திருப்பான் என்பது வேறு விடயம்! 


ஏனெனில் அவினாஷ் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின்னர், பாஸ்கரன் தோற்றுக் கைவிட்ட தேடுதல் வேலையைக் கையிலெடுத்திருந்தான். அதன்படி அவனுக்கு கிடைத்திருந்த தகவலைக் கொண்டு தற்சமயம் சஞ்சு இருக்குமிடம் பெங்களூருதான் என்று திட்டவட்டமாக முத்திரைக் குத்தியிருந்தான். பின்னர் அர்ஜூனும் அவனுக்கு கைக் கொடுக்க, இருவருமாக கிட்டத்தட்ட சஞ்சுவை நெருங்கிதான் வந்திருந்தனர்.


ஆனால் அதற்கும்‌ முன்னரே ஸ்ரீஅரங்கநாதர் கோவிலில் வைத்து எதிர்பாராவிதமாக அவினாஷ் பிரகதியைக் கைக்காட்ட, அதற்கு அவளும் ஆம் எனத் தலையசைக்க… எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!


இங்கேதான் முன்பொருமுறை பிரகதி சொன்ன ‘கடவுள் செட்டிங்’ வேலை செய்திருக்கிறது என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!


“யப்! பிரகதி மேல இருக்க லவ்ல அவி அத்தான் உங்க ஃபேமிலி பத்தி சரியா எக்ஸ்ப்ளோர் பண்ணமாட்டார்ன்னு, நிர்மா அத்தை அந்த வேலையை என்கிட்ட தான் கொடுத்தாங்க. பட் நான் அவங்களுக்கு கொடுத்த ரிப்போர்ட்ல உன்னைப்‌ பத்தின உண்மையைச் சொல்லல.”


“ஏன் சொல்லிருக்க வேண்டியதுதானே?”


“எனக்கும் அவி அத்தானோட விருப்பம் முக்கியம்தான்! அப்போவே சொல்லிருந்தா இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு வராம, அவர் பிரகதி பக்கம் கண்ணைக் கூட திருப்பிருக்க மாட்டார். அதான் சொல்லல. பட், நம்ம அம்மாவோட நிம்மதிக்கு முன்னாடி நான் வேற எதையும் முக்கியமா நினைக்கமாட்டேன் மிஸ்டர் சஞ்சய் பாஸ்கர்!”


இப்போது அவனின் ‘நம்ம’ அம்மாவில் மனம் லேசானது இவனுக்கு.


சட்டென ஏதோ தோன்ற, “அப்போ அந்த ஆக்ஸிடெண்ட்?” எனக் கேட்க,


“யாஹ் இட்’ஸ் மீ!” என அலட்சியமாக தோள் குலுக்கிய அர்ஜூன், அன்று அக்னி விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போது எப்படி அதிகம் அடிபடாதவாறு தேர்ந்த ஆட்டோக்காரரை வைத்து விபத்தேற்படுத்தினானென சொல்ல,


தம்பியை மெச்சுதலாகப் பார்த்தான் இவன். “என் சஸ்பெக்ஷன் எல்லாம் பிஸினெஸ் சைட்ல இருந்ததால உன்னை மிஸ் பண்ணிட்டேன்! அந்த நர்ஸ் அன்னிக்கு ஓவரா வழியும்போதே எனக்கு டௌட்தான்.”


அன்று விபத்தை மறைத்து அம்மாவையும் பாட்டியையும் எப்படி சமாளிப்பது என்றே சிந்தித்திருந்த அக்னி, அந்த மருத்துவமனை செவிலியப் பெண்ணின் மீது சந்தேகம் வந்த போதிலும் அவளை அப்போதே மறந்துபோனான்.  


மேசையில் கையூன்றி கன்னத்தில் கை வைத்திருந்த அர்ஜூன், ‘இனி நீதான் சொல்ல வேண்டும்’ என்பதாகத் தலையசைக்க,


“ஸோ?” எனக் கேள்வியாகப் பார்த்தான் இவன்.


“நானும் வந்ததுல இருந்து உன்னை டீப்பா வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். அம்மாவைப் பார்த்தா ‘ஆராரிராரோ நானிங்கே பாட’ன்னு கண்ணாலேயே பாடறியே தவிர, நான்தான் உன் பிள்ளைன்னு சொல்ல வாய் வரலை, ம்ம்? 


தன்னை எங்கும் நகரவிடாமல் பூட்டி வைக்கவே, இத்தனை நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்துவிட்டு, இன்னும் நான்கு நாட்களில் திருமணம் என்ற நிலையில் தற்போது வந்து மிரட்டிப் பார்க்கிறான் தம்பிக்காரன் என்று புரிந்தது. அத்துடன் தன்னை, தன் மனநிலையை வேவு பார்க்கவும் செய்திருக்கிறான்.


“ஆனா அம்மாவால உன்னை உணர முடியுதுன்றது தான் எனக்கே தாங்க முடியாத ஆச்சரியம்!” அர்ஜூனின் விழிகளில் ஆச்சரியத்தின் ஆர்ப்பரிப்பு!


‘என் தங்க அம்மா!’ என ஒரு சின்னப் புன்னகைக்குள் அம்மாவைக் கொண்டாடிக் கொண்டான் இவன். அவர் இன்னும் தன்னை மறக்கவில்லை என்பதே இவனுக்கு மகிழ்ச்சி என்றால், அவரால் இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகும் தன் மூச்சுக்காற்றை உணர முடிவதில் எல்லையில்லா ஆனந்தம் கொண்டான். விளைவாக கண்களில் நீர்த்துளிகளுக்கும் சிறிது இடமளித்தான்.


தங்கள் சஞ்சுவிற்கு இன்னமும் தங்களுடனான பந்தம் அற்றுப் போகவில்லை; அம்மாவின் மீதான பாசத்தையும் அவன் ஆவியாக்கி விடவில்லை என்பதை, இந்த பத்து நாட்களில் அவனை அருகே இருந்து கண்காணித்திருந்த அர்ஜூனால் இப்போதைய அவன் நிலையையும் புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணனுக்கு சங்கடமளிக்காமல் அங்கிருந்த அழகுச் செடிகளிடம் விழி திருப்ப, 


இவனும் தன் பூரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டான்.

“சரி, நீ சொன்ன ஆப்ளிகேஷன் என்ன?”


பட்டென்று சொன்னான் அவன்‌. “சனாவைக் கல்யாணம் பண்ணிக்கனும்.”


“ஈனு?!” 


தம்பி இப்படியோர் கோரிக்கையைத் தன்னிடம் வைப்பான்‌ என்று கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்கவில்லை.


அண்ணனைச் சற்றுநேரம் திருதிருக்கச் செய்துவிட்டு, சாவகாசமாக அருகிருந்த செடியைப் பிய்த்துப் போட, அதட்டலாக அழைத்தான் இவன். “அர்ஜூன்! ஆர் யூ ஜோக்கிங்?”


அவனை அழுத்தமாகப் பார்த்து, “ஐ’ம் சீரியஸ்!” என்றான்.


“எனக்கு புரியல. இதுக்கும் நான்தான் சஞ்சுன்னு உண்மையைச் சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?”


ஆழ மூச்செடுத்துக் கொண்டவன் ஒருவித வேதனைக் குரலில் சொன்னான். “சம்பந்தம் இருக்குது.”


“என்ன சம்பந்தம்?”


“.....”


“பட், வீட்ல உங்க ரெண்டு பேரையும்…” என்றவனை இடையிட்டான் அர்ஜூன்.


“அஃப்கோர்ஸ்! நிர்மா அத்தை எங்களை மேரேஜ்ன்ற போஸ்ட்ல டேக் பண்ண பார்க்கறாங்க. பட் எங்களுக்கு சுத்தமா அப்டியொரு எண்ணமில்லை. ட்டூ பீ ஃப்ராங்க், அம்மா நிறைய நாட்கள் உன் நினைவுல என்னைக் கவனிக்காம இருந்தப்போல்லாம், சிந்தி சிந்தி சாப்பிடற சின்ன கைல எனக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டு, என் கூட விளையாடி, என்னை அம்மாவுக்கு ஏங்க விடாம, என் சிரிப்பைத் தொலைக்காம பத்திரமா பார்த்துக்கிட்டவ அவ! அப்டி அம்மா ஸ்தானத்துல வச்சிருக்க பொண்ணை நான் எப்டி கல்யாணம் செய்வேன்?”


அனு தன் நினைவில் இவனைக் கவனித்துக் கொள்ளவில்லை என்றதில் தமையனுக்கு குற்றவுணர்வு! “ஸாரி…”


“தேவையில்லை. ஒரு ஸ்டேஜூக்கு அப்புறம் அம்மா என்னை நல்லாவே பார்த்துக்கிட்டாங்க. எப்பவும் நான்தான் அவங்களுக்கு செல்லப் பிள்ளை!” என்று அலட்டலாகப் பெருமைப்பட்டான்.


சஞ்சுண்ணா என்றால் அம்மா சிரிக்கிறாள் என்று நினைத்து, ‘சஞ்சுண்ணா சஞ்சுண்ணா’ என்று மிழற்றிய குழந்தை அர்ஜூனின் மேல் ஒரு கட்டத்தில் அனுவின் கவனம் திரும்பியது. இவனையும் எங்கும் தொலைத்துவிடக் கூடாதென்று கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள். 


ஒருமுறை அர்ஜூனின் அலைப்பேசி பழுதாகிப் போனதால் வீட்டில் தெரியப்படுத்த முயலாமல் நண்பர்களுடன் வெளியே தங்கிவிட, பாஸ்கரன் பதறிப்போய் அவன் நண்பர்கள் சிலரிடம் விசாரித்து, மகன் பத்திரமாக தான் இருக்கிறான் என்று தெரிந்து அனுவையும் அமைதியாக இருக்கும்படி சொல்லியிருக்க, மறுநாள் இவன் வீட்டிற்கு போனபோது அனு அடித்த அடியில் விளக்குமாறு பிய்ந்துப்போனது. அம்மாவிற்கு தன் மேல் பிரியம் உண்டு என்று புரிந்தாலும் சஞ்சு மேல் உள்ள அளவிற்கு இல்லை என்று வளர் பருவத்தில் இவன் நினைத்ததுண்டு. ஆனால் சஞ்சுவிற்கு நிகராக அம்மா தன்னையும் நேசிக்கிறார் என்று அன்றைய ஒவ்வொரு அடியிலும் விளங்கிக்கொண்டான் அர்ஜூன்!


அதனால்தான் தற்போது இந்த அலட்டல்!


தம்பியின் பெருமையில் அக்னிக்கு சிரிப்பு வந்தது. ‘எப்பவுமே எல்லாருக்கும் நீதாண்டா செல்லப் பிள்ளை; ஆளப் பிறந்தவன்!’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் பழையதைச் சொல்லி இரக்கம் சம்பாதிக்க விரும்பவில்லை. மாறாக, தனக்கும் தன் தம்பி செல்லப் பிள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை வந்தது.


தாத்தா ஒருபோதும் அர்ஜூனைத் தனக்கு விளையாட தந்ததில்லை. அதனால் இப்போது தன்னுடன் விளையாடி பார்க்கும் அர்ஜூனைப் பிடிக்கவே செய்தது. அவன் முகத்தில் அம்மாவின் சாயல் வேறு!


“சிரிக்கறதை நிறுத்திட்டு எனக்கு பதில் சொன்னா நல்லா இருக்கும்.”


‘ஏன் இப்படி கேட்கிறான். ஒருவேளை இவனுக்கு அந்த ‘அருணைப்’ பிடிக்கவில்லையோ?’


“நான் குடிகாரனா, பொறுக்கியா இருந்திருந்தா கூட என்கிட்ட இப்டி கேட்டிருப்பியா நீ?”


“நெவர்! நான் அவளுக்கு ஏற்கனவே நல்ல மாப்பிள்ளை பார்த்து வச்சிருந்தேன்.”


“வாட்? யாரு?”


“ப்ச்! இனி அவரைத் தேவையில்லாம ஸீனுக்குள்ள கொண்டு வர வேணாம். அந்த சென்ட்டி டிராமாவையும் கேன்ஸல் பண்ணிடலாம்.”


“வாட் ஆர் யூ டாக்கிங் அபௌட்?”


“நத்திங்! அத்தையை, அம்மாவைன்னு யாரையாவது ஹாஸ்பிடல்ல படுக்க வச்சு, அவளை சென்டிமென்ட்டலா லாக் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்ன்னு நினைச்சிருந்தேன். இனி அது தேவையில்லை.”


பல்லைக் கடித்தான் இவன். “ஏன் இப்பவும் அந்த நல்ல்..ல மாப்பிள்ளையையே கட்டி வைக்க வேண்டியதுதானே?”


“அதான் இப்போ நீ வந்துட்டியே!”


“நான் முடியாதுன்னு சொன்னா?”


“நீதான் சஞ்சுன்னு எல்லார்க்கிட்டேயும் ரிவீல் பண்ணி, பிரபஞ்சன் அங்கிள் மேல கேஸ் ஃபைல் பண்ணுவேன்.”


“ஷ்ஷ்! அர்ஜூன்ன்…” எனக் கண் மூடி பிடறியை அழுத்தாம தேய்த்துக்கொண்டவன், “ஆல்ரைட்! பட் வை மீ?” என இன்னும் ஆச்சர்யத்தின் விளிம்பில் இருந்தான்.


“இதுக்கு நான் அப்புறமா பதில் சொல்றேன். நீ முதல்ல என் அண்ணியைக் கட்டிப்பேன்னு ப்ராமிஸ் பண்ணு!”


“ஹான்! வா கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னா இந்தா கட்டுன்னு கழுத்தை நீட்டுவாளா அவ?”


“மாட்டா தான்!”


“யூ ஆர் ஜஸ்ட் இர்ரிடேட்டிங் மீ அர்ஜூன்.”


“ஐ டோண்ட் பாதர் அபௌட் தட்! உனக்கு வேற‌ லவ் எதுவுமில்லன்ற வரை விசாரிச்சுட்டேன். இப்போ உனக்கு சனாவைக் கட்டிக்கறதுல அப்ஜெக்ஷன் இருக்குதா? அதை மட்டும் சொல்லு.”


“எஸ், அஃப்கோர்ஸ்!” அருணை மனதில் நினைத்துச் சொன்னான்.


“இருந்தாலும் ஐ டோண்ட் பாதர் அபௌட் தட்! நீ சனாவைத் தான் கட்டிக்கணும்!”


“டேய் என்ன மிரட்டுற?” 


“அப்டித்தான் வச்சிக்கோ!”


“அப்டியென்ன நானே தான் கட்டிக்கணும்?”


“அவகிட்ட பேசினா உனக்கே தெரியும்.”


“ஏன் நீயே சொல்றது!”


“ப்ச் ப்ச்!”


மீண்டும் பிடறியைத் தேய்த்துக்கொண்டான் இவன். “இப்போ போய் நான் எப்டி கேட்கறது?”


“எனக்கு அண்ணனா இருந்துக்கிட்டு இதுக்கெல்லாம் தயங்கலாமா? அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ! இம்ப்ரெஸ் பண்ண டிரைப் பண்ணு!”


“எனக்கு அதெல்லாம் வராது.” என்றான் பட்டென்று!


“வரணும்! சனாவுக்கு உன் மேல லவ் வரணும்! அவளைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும். அவ்ளோதான் என்னோட ஆப்ளிகேஷன்.” என்றுவிட்டு எழுந்து நடக்க,


சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் அக்னி. ‘அவ காதல் தெரிஞ்சும் இவன் ஏன் இப்டி பேசறான்?’


சற்று தொலைவு நடந்து போயிருந்த அர்ஜூனைச் சத்தமாக அழைத்தான். “அர்ஜூன்!”


அவன் மேலே பார்த்து அலுத்துக்கொண்டு விடுவிடுவெனத் திரும்பி வந்து, “என்னை நிம்மதியா லவ் பண்ண விடமாட்டியா? நான் என் பானு பேபி கூட இருக்கற டைமே கொஞ்சம்தான்!” என,


பல்லைக் கடித்தான் அக்னி. “என்கிட்டயே இப்டி பேசறதுக்கு உனக்கு எவ்ளோ தைரியம்!”


“இதுக்கு எதுக்கு தைரியம்? லவ் இருந்தா போதுமே?”


“யூ ஆர் ஜஸ்ட் இர்ரிடேட்டிங் மீ அர்ஜூன்!”


“பேசி கொஞ்ச நேரம்தான் ஆகுது. அதுக்குள்ள இதே டயலாக்கையே திருப்பி திருப்பி சொல்லிட்டிருக்க! இப்போ எதுக்கு போனவனைத் திரும்ப கூப்பிட்ட?”


“ஒருவேளை நான் சந்தனாவைக் கல்யாணம் செஞ்சா தான் நான் இங்கே இருப்பேன்னு நினைக்கறியா? ஆர் யூ பைண்டிங் மீ ட்டூ அவர் ஃபேமிலி த்ரூ சந்தனா?”


“நோப்!”


“வேற என்ன காரணம் இருக்கமுடியும்?”


“நீ அவக்கிட்ட பேசு! அப்புறம் உனக்கே…”


அவனைக் கைக் காட்டி நிறுத்தியவன், “பேசு பேசுன்னா என்னத்தைடா பேச சொல்ற?” என்று எரிந்து விழுந்தான்.


“அவளுக்கு பிடிச்சதைப் பத்தி பேச ஆரம்பி!”


“அவளுக்கு என்னப் பிடிக்கும்ன்னு எனக்கென்ன தெரியும்?”


“நான் சொல்றேன். சனாவுக்கு நம்ம அம்மாவைப் பிடிக்கும். என்னைப் பிடிக்கும். அவளோட வொர்க்கிங் இன்டஸ்ட்ரீ பிடிக்கும். சின்ன வயசுல நிர்மா அத்தைக்கிட்ட தையல், எம்ப்ராய்டரிங் எல்லாம் கத்துக்கிட்டா! அப்டித்தான் டெக்ஸ்டைல் டெக்னாலஜில இன்ட்ரஸ்ட் வந்தது. 


அப்புறம் டார்க் ரூம், மியூஸிக், நைட் ரெய்ன் பிடிக்கும். ஐஸ்கிரீம்ன்னா உயிரையே கொடுப்பா. அதுலேயும் அருண்! அருண் ஐஸ்கிரீம்க்கு மட்டும்தான் மேடம் உருகுவாங்க. சைல்ட் ஹூட் டேஸ்லயே உடல், பொருள், ஆவி அனைத்தையும் அருணுக்காக தியாகம் பண்ண நினைச்சவங்க தெரியுமா? ஒருமுறை ‘அருண்’ வாங்கித் தரலைன்னு சித்தி பாட்டி மண்டையைக் கல்லால உடைச்சிருக்கா! ஹாஹா…”


அவன் அருண் என்றதுமே இவன் புருவங்கள் குவிந்திருந்தது. “ஈனூஊ..?!” 

'பாதகத்தி! அப்டியே மனுஷனைச் சொல்ற மாதிரியே சொன்னாளே...'

அக்னிக்கு எப்படி உணர்கிறோம் என்று புரியவில்லை‌. சிரிப்பு வந்தது. கூடவே இத்தனை நாட்கள் முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று கோபமும் வந்தது. அத்துடன் வேறொருவனுக்கு சொந்தம் என நினைத்து, அவளை மறக்க மறுக்கும் தன் மனதினை எண்ணி குற்றவுணர்வில் தவித்ததில் ஆற்றாமை வேறு பொங்கியது. அத்தனை உணர்வுகளும் சேர்ந்து அவனை நிலைகொள்ள விடாமல் தவிக்கச் செய்தது. 


வா வாட்? அருண்’ன்னா ஐஸ்கிரீமா?”


“ஆமா! ஏன்?” 


“மை குட்னெஸ்! அருண்’ன்னா ஐஸ்கிரீமாடா அர்ஜூன்?” 


மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைக் கேட்பவனை விசித்திரமாக பார்த்து வைத்தான் தம்பி.


“ஏன் பேங்களூர்ல அருண் ப்ராண்ட் கிடையாதா என்ன?”


“ச்சச்ச…” என்றவனுக்கு இன்னுமொரு சந்தேகம் வந்தது. ‘அப்படியானால் அன்று அவளின் தோழி ‘பாய் ஃப்ரெண்ட்’ என்று சொன்னது யாரை?’. மீண்டும் வதனம் குழப்பத்தையும் உஷ்ணத்தையும் ஒருங்கே தத்தெடுத்தது.

 

இவனிடம் கேட்டால் அவளிடம் பேசு என்று சொல்லுவான். இவனுக்குமே இனி அவளிடம் பேச தடையொன்றும் இல்லையே! பேசித்தான் பார்க்கலாமே!


இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென

அறிகுறி காட்டுகிறாய்!


இசைக்கும்...


Comments

  1. appada, oru valiya mandai la bulb erinjudhu Agni ku. Ennoda guess correct uh. Arjun thaan note pannirkan Agni ya.

    ReplyDelete
    Replies
    1. Smart guess🫰🫰 Many thanks 4 ur precious comment⚘️⚘️

      Delete
  2. It's my pleasure 😊
    இன்னும் நிறைய story எழுதுங்க யார் கருத்து சொல்றாங்களோ இல்லையோ, நான் சொல்றேன்!😀
    அப்புறம் அந்த அருண் 'ஐஸ்கிரீம்'தான்னு அப்பவே சொன்னேன்ல நானு. ம்ம்..
    அம்மாவும், பையனும் சேர்ர அத்தியாயத்தை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றிகள் 💌💌

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25