கருவறை கீதம் -31
அத்தியாயம் 31 பூ ச்செடிகளுக்கானக் கட்டிலிருந்து சிறிய கல்லொன்று உருண்டு விழுந்ததையடுத்து, அண்ணன், தம்பி இருவரும் திரும்பிப் பார்க்க, இருளில் இருந்து மெல்ல வெளிச்சத்திற்கு வந்தாள் அனுராதா. மீண்டும் அக்னியை அருகே ஒருமுறை கண்டுவிட்டால் இன்றிரவு தூக்க மாத்திரைக்கு வேலை வைக்காமலும் கணவனைத் தொந்தரவு செய்யாமலும் நிம்மதியாக தூங்கிவிடலாம் என்று தோன்றவே, அர்ஜூனுக்கு சந்தேகம் வந்து விடாதபடி இருவருக்கும் கற்கண்டு பால் எடுத்துக்கொண்டு வந்திருந்தாள் அவள். வந்தவள் அர்ஜூனின் கடைசி உரையாடலை மிகத் தெளிவாகக் கேட்டிருந்தாள். அப்போதுதான் பிடிமானத்திற்காகக் கை வைக்க, அங்கிருந்த கல்லொன்று உருண்டோடி வந்து, அந்த நிசப்தப் பொழுதில் அவள் மக்களின் கவனத்தைக் கலைத்தது. அம்மாவைக் கண்டதும் அர்ஜூன் சாந்தமான பார்வையுடன் அப்படியே நிற்க, “ம்மா!” எனப் பதற்றத்துடன் அவளருகே ஓடி தள்ளாடியவளைப் பிடித்திருந்தான் சஞ்சய். “சஞ்சு!” கண்ணீர் தளும்பிய கீச்சுக்குரல் மிகமிக மெலிதாக ஒலித்தது. அம்மாவின் குரலில் தன் பெயரைக் கேட்டவன் புன்னகைக்க முயன்றபடி, “எஸ்ம்மா! உன் சஞ்சு!” என்றான் இயல்பாக! நடுக்கம் கொண்டிருந்த அவள் கையிலிருந்து த