Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல்🚗💌 - 6.2

ஸ்கார்பியோ காதல்

 


அத்தியாயம் 6.2


பத்து நாட்கள் கடந்திருந்தன. அவன் தனது வலது கையில் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலுக்கு இடையில் அம்ருதாவின் விலையுயர்ந்த மோதிரத்தைத் தூக்கி பிடித்து பார்த்தவாறு நீள்விரிக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.


“அம்ம்…முக்…குட்டி…” என நீட்டி முழக்கியவனின் இதழ்களில் நூறு விழுக்காடு கேலிப் புன்னகை!


தன் நீளக் கால்களை விச்ராந்தையாக நீட்டிக்கொண்டு மனநிலை பிறழ்ந்தவன் போல் ஏதோவோர் பாடலைப் பாடியவன், “எப்டிடீ அந்த அத்துவான காட்டுக்குள்ளே என்னைத் தேடி வந்து என்கிட்ட சிக்கின?” என மோதிரத்தைப் பார்த்துக் கேட்டான்.


“ப்ச் ப்ச்! கடவுளா பார்த்து எனக்கு அனுப்பி வச்ச முதல் கிஃப்ட் நீ!” என்று எள்ளல் நகை புரிந்தவனின் பார்வை சடுதியில் விகாரமாக மாறி, சட்டென ஏக்கம் கொண்டு அருகிலிருந்த தன் மகளின் புகைப்படத்திற்கு தாவியது. அம்ருதாவின் மோதிரத்தைச் சட்டைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டு மகளின் புகைப்படத்தைக் கையில் எடுத்தான்.


மூன்று வயதுக் குழந்தை! பிஞ்சு முகத்தில் அப்படியே அவனைப் பிரதியெடுத்திருந்தாள். புகைப்படத்தில் சின்னப் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் வழிந்தோடும் உவகை! துரோகமிழைக்கும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து சாதிக்க போவது ஒன்றுமில்லை என்று நினைத்தாளோ என்னவோ, சடுதியில் வந்த தேவதையைப் போல் மறைந்து போனாள்.


“வெல்லக்கட்டி, டாடி வர்ற வரை வெய்ட் பண்ணிருக்கலாம்ல? ஏண்டா அவ கூட போன?” என்று கேட்டவனின் கண்களில் ஈரம்!


“டாடி வேணாமாடா உனக்கு?” எனக் கேட்டு விசித்து அழுதான்.


“டாடி மேல தான்டா தப்பு… அப்பாவை மன்னிச்சிடுடா…” என்றவன் பின்னால் சாய்ந்து ஈர இமைகளை மூடிக்கொண்டான்.


மனக்கண்ணில் அவனும் அவனின் காதலியும்! 


“எனக்கு தான் பிடிக்கலன்னு சொல்றேன்ல? அப்புறம் ஏன் லவ் அது இதுன்னு டார்ச்சர் பண்ற?” - அவள்


“இப்போ பிடிக்கலன்னா அப்புறம் பிடிக்கும்டீ… கல்யாணம் பண்ணிக்கலாமா ரேவ்ஸ்?” - இவன்.


“உனக்கு அவ்ளோதான் மரியாதை! பேசாம போய்டுடா!” என வெறுப்பை உமிழ்ந்த அவள் கண்களைக் கண்ட பின்னும் அவளைத் துரத்தி துரத்தி காதலித்து திரிந்தானே இவன்!


‘போய்விடு!’ என்று லட்சத்தியோரு தரம் சொன்னாளே… அப்போதே அவளை விட்டு போயிருந்தால் இன்று நெஞ்சில் உதிரம் வடிக்கும் இந்நிலை வந்திருக்காதே! அன்று இளமையின் வேகத்தில் காதல் கண்ணை, அறிவை, மனத்தை என எல்லாவற்றையும் மறைத்துவிட்டது.


“காதல் இல்ல; அது உன் திமிர்!” என்று தன் கன்னத்தில் அறைந்துகொண்டான்.


ரேவதி! அவள் கல்லூரி பயிலும் போதே பேருந்தில் ஒருமுறை பார்த்துவிட்டு, அவள் அழகில் புத்தி பேதலித்து, காதலிக்கிறேன் பேர்வழி என்று அவள் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை அவள் போகுமிடமெங்கும் அவளையே சுற்றி திரிந்தான். அவளின் விருப்பு, வெறுப்புகளை ஆர்வமாகத் தெரிந்து கொண்டவனுக்கு, அவளின் வெறுப்பு பட்டியலின் முதலிடத்தில் தாம்தான் இருக்கிறோம் என்று தெரியாமலே போனது.


அவள் படிப்பை முடித்ததும் அவளுடைய வீட்டில் பேசி திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டு, “இப்போ என்னடி சொல்றே?” எனக் குறும்பாகச் சிரித்திட, வெறுமையானப் பார்வையைத் தந்துவிட்டு போனாள் ரேவதி.


நாள் குறித்து, திருமணம் முடியும் வரையிலான காலகட்டத்தில், அவள் இவனுடன் பேசவேயில்லை. இவனே பேச முயன்றாலும் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும். மஞ்சள் கயிறு தன் மாயாஜாலத்தைக் காட்டிவிடும் என்று தமிழ் சினிமாவைப் பார்த்து முட்டாள்தனமாக நம்பினான். 


ஆண்களுக்கு அரைகிழம் வயதானால் கூட பெண்ணின் மனமும் உணர்வுகளும் புரிந்து தொலையாது. இவனுக்கும் அந்த இருபத்தைந்து வயதில் வாழ்க்கை குறித்த அறிவு அவ்வளவுக்குதான் வேலை செய்தது. கல்யாணக் கனவுகளில் மிதந்தான்.


திருமணமும் முடிந்தது. வீட்டினரின் வற்புறுத்தலால் களிமண்ணில் செய்து வைத்த பொம்மை போல் இவன் கையால் தாலியை ஏற்றிருந்தாள் ரேவதி. அவள் எந்த எதிர்ப்பையும் காட்டாததால் அப்போதும் அனைத்தும் சரியாகிப் போகும் என்று நம்பி தொலைத்தான் இவன்.


முதலிரவில் இவன் கேட்கும் முன்னரே அவள் ஆயத்தமாகி நின்றதில் திகைத்துப் போனான். “ஹேய் ரேவ்ஸ்!”


அன்று மேலே வந்து விழுந்தவள் இவனைப் பேசவே விடவில்லை. “ரேவ்ஸ் எனக்கு வேணாம்டீ…”


“ப்ச்! பின்னாடி சுத்தும்போது சொல்லிருக்கலாம்ல வேணாம்னு? தாலி கட்டும்போது சொல்லிருக்கலாம்ல வேணாம்னு?” என்றவள் இதழ் கொண்டு அவன் பேச்சை நிறுத்தினாள். 


அவன் வேண்டி விரும்பி கட்டிக்கொண்ட பெண்ணின் முதல் முத்தம் கசப்பாய் இருந்தது.


அவன் கைகளை எடுத்து தன் வெற்று உடலின் மீது படரவிட, அசூயைக் கொண்டு கையை உதறினான். அவளின் புது பரிமாணத்தைக் கண்டவன் அவளுடன் ஒன்ற முடியாமல் திணறினான்.


“ஆம்பளை தானாடா நீ?” என்று கேட்டு அவன் ஆண்மையை இழிவுபடுத்தினாள்.


“ரேவ்ஸ்! நீ ஏன் இப்டி? நமக்கு லைஃப் ஃபுல்லா இருக்குது. இப்டி… இப்டி வேணாம் ரேவ்ஸ்…”


“வேற எப்டி? உன் காதலுக்கு மதிப்பு கொடுத்து நீ தொட, நான் சிலிர்க்கன்னு இருக்கணுமா? பாரு! தொட்டு பாரு. சிலிர்க்கவே இல்ல பாரேன்.” என்று பைத்தியம் போல் சிரித்தாள்.


தன்னிடம் கெஞ்சியவனைக் காலில் போட்டு மிதித்தாள். தன் காதலை அவள் குப்பையைப் போல் கசக்கி எறிவதாக உணர்ந்தவன் வேதனைக் கொண்டான். “நீ என் கூட இருந்தாலே போதும். இதுலாம் வேணாம் ரேவ்ஸ்.”


மனைவியை திருப்திப்படுத்த வக்கில்லை என்று சொல்லி காறி உமிழ்ந்தாள். “உனக்கெல்லாம் எதுக்குடா காதலும் கல்யாணமும்?” என்று கேட்டு அவனை மட்டுமல்லாது அவன் காதலையும் சாகடித்தாள்.


அன்று விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமாக அவளோடு இணைந்தான்.


முடிவில் எகத்தாளமாக சிரித்தவள், “இதுக்காக தானே இந்தக் கல்யாணம்? வாயேன் இன்னொரு முறை!” என்று அவன் மேல் காலைத் தூக்கிப் போட,


பட்டென்று உதறித் தள்ளிவிட்டு ஆற்றாமையாகக் கேட்டான். “ச்ச! இத்தனை நாள்ல ஒருமுறை கூட என் லவ் உனக்கு புரியவே இல்லையா ரேவ்ஸ்?” 


“லவ்? ஒரு பொண்ணை விடாம சுத்தி சுத்தி டார்ச்சர் பண்றதுக்கு பேர் லவ்வாடா? அவ மனசுல என்ன இருக்குதுன்னு ஒரு நிமிஷம் நின்னு யோசிச்சிருப்பியா? உனக்கு விருப்பம் இல்லன்றதால இப்போ இந்த கால் மணி நேரத்தைக் கூட உன்னால தாங்க முடியலயே… அப்போ ரெண்டு வருஷமா எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லியும் விடாம டார்ச்சர் செஞ்சு, இதோ கல்யாணம் வரை இழுத்துட்டு வந்து என் வாழ்க்கை மொத்தத்தையும் விருப்பமில்லாததா மாத்தி வச்சிருக்கியே இதுதான் உன் லவ்வா?” என்று ஆவேசமாகக் கேட்டு அவனை உலுக்கி எடுத்தாள் ரேவதி.


தன் வாழ்வில் ரேவதி காலடி எடுத்து வைத்ததிலிருந்து ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தவன், “ஆஆஹ்!!” என உடலைக் குறுக்கி தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினான்.


இளம் பிராயத்தில் ரேவதி விடயத்தில் காதலென்று இவன் செய்த தவறு இன்று இவனின் உயிர்நீரில் பிறந்த மழலையைக் காவு வாங்கிவிட்டது. அழுதான். எல்லாவற்றுக்கும் சேர்த்து அழுதான். 


விசும்பிக் கொண்டிருந்தவன் திடுமென எழுந்து முகம் துடைத்துக்கொண்டு விகாரமானப் பார்வையுடன், “இனி ஒருத்தரையும் விடமாட்டேன். ரேவ்ஸ், உனக்கு துணைக்கு இன்னும் நிறைய பேரை அனுப்பிவிடறேன்டீ!” என்று மீண்டும் அம்ருதாவின் மோதிரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்மம் மிளிர வசீகரமாகப் புன்னகைத்தான்.


“வந்துகிட்டே… இருக்கேன். கௌண்ட் யோர் டேஸ் டாக்டர் அம்ம்…முக்குட்டி!”


Shift the gear... story accelerates.


                              Next article 🎉

Comments

Post a Comment

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...