Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 12.2

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 12.2

ஏற்கனவே அந்த பெண்ணின் மேல் கோபத்தில் இருந்தவள், "ஹான்! அன்னிக்கு வந்த முதல் நாள் வகை வகையா பொண்ணுங்களை பார்த்துட்டேன்னு சொன்னான். இப்ப மட்டும் கற்பாம் கற்பு! மண்ணாங்கட்டி கற்பு!!" என்று எரிந்து விழுந்தாள்.

மையல் பார்வையோடு மோகமாய் புன்னகைத்தவன், "நான் அன்னிக்கு சொன்னது எனக்கே மறந்துடுச்சு. நீ இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா?" என்றவாறே அவளை நெருங்கினான்.

"நீ சொன்னது நிஜமா?" இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

"நிஜமா இருக்கும்னு நினைக்கறியா?" இரண்டடி முன்னால் நகர்ந்தான்.

"பொய்யா இருக்கும்னு சொல்ல முடியல." இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

"உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்." இரண்டடி முன்னால் நகர்ந்தான்.

நின்று முறைத்தாள் அவள்.
நடந்தவாறே சிரித்தான் இவன்.  

அவளருகே சென்றதும் விலக விடாமல் பிடித்துக்கொண்டான். ஆரவிக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை. விலகிச் செல்லும் எண்ணமுமில்லை போலும். நேற்று போலவே அவள் பிறை நெற்றியில் தன் இதழ் ரேகையைப் பதித்தான் விபுநந்தன். ஆனால் நேற்று போல் இவள் முறைக்கவில்லை. அவன் மேல் புதிதாய் முளைத்திருந்த காதல் இன்று முறைக்க விடவில்லை.

"இங்கிருந்து போ ஆரவி. ப்ளீஸ்ஸ்... போய்டு!" அவன் குரலில் காதல் எக்கச்சக்கமாய் இழையோடி பிசிறடித்தது.

"ம்ம்! பயமா இருக்கு விபு..." - அடம்பிடிக்கும் குழந்தையின் முகம்.

"உன்னை பேபி மாமினு சொல்றது சரியா தான் இருக்குது. தனியா தூங்க பயப்படற?"

"நாலு நாளா தனியா தான் தூங்கினேன் தெரிஞ்சுக்கோ!" - அவன் நெஞ்சை முட்டியது ரோஷக்குரல்!

"இன்னிக்கு மட்டும் என்னவாம்?" - அவள் நெற்றியை உரசியது ஹஸ்கிக் குரல்!

"இன்னிக்கு தான் என்‌ மனசு சொல்லுச்சு..."

"என்னன்னு?" 

"விபு-வ நல்லவனா இருக்க விடாத'ன்னு!" என்று குறும்பாகக் கூறி சிரித்தாள்.

"அடிப்பாவி! இதுக்கு மேல நீ இங்கே இருந்தா நிஜமாவே என்னைக் கெட்டவனா ஆக்கிடுவ! ஒழுங்கா உன் ரூம்க்கு போ!" சற்று அதட்டலாகவே கூறினான்.

அவள், "ஹும் ஹும்! விபு..." என்று மூக்கை சுருக்கி சிணுங்கவும்,

அவனும் எத்தனை நேரம் தான் தாக்குப்பிடிப்பான்? அடங்கிய குரலில், "பேபீ!" என்றழைத்தவன் சட்டென இழுத்தணைத்துக் கொண்டு, அவள் காதை மறைத்தக் கூந்தலில் முகம் முழுவதையும் தோய்த்து, "ஐ ஜஸ்ட் லவ் யூ மாமி!" என்று பித்தமேறிய மொழி பேசினான்.

ஏற்கனவே நந்தனின் பார்வையில் அவன் மனம் இவளுக்கும் புரிந்திருந்தாலும், இப்போது அதை அவன் வாய்மொழியாகவேக் கூறி, ஆரவியின் இதயத்தில் தன் காதல் ராகத்தை இழைத்தான்.  

அவளும் அவனை இறுகக் கட்டிக் கொண்டு, "லவ் யூ மோர் விபு." என்றாள். 

உணர்ச்சிமிகுதியில் தித்திப்பான கண்ணீர் எட்டிப் பார்த்தது. சற்றுமுன் அந்த பெண்ணின் செயலால் காயம்பட்டிருந்த மனம், 'என்னவன்! எனக்கு மட்டுமே உரியவன்!!' என்ற உரிமை உணர்வை நாடியது. எனவே, இன்னமும் அவன் சட்டையை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். அவளிடம் வேறுபாட்டை உணர்ந்து அவன் தான் விலக்கி நிறுத்தினான்.

"ஓய் மாமி! என்ன? எதுக்கு இப்ப இவ்ளோ இமோஷனல் ஆகற?"

"நத்திங் விபு!"

"ஹாஹா… பேபி!" என்று அவள் மூக்குத்திக்கு மோட்சம் தந்த மூக்கைப் பிடித்து ஆட்டினான், அவளின் 'நத்திங் விபு'விற்காக!

இமைக் கொட்டாமல் அவன் விழிகளைப் பார்த்தவாறே, "யூ ஆர் மைன்! மைன் டூ மீ விபு!" என்றாள்.

"ப்ச்! இப்ப யாரு இல்லனு சொன்னாங்களாம்? ஐ'ம் ஜஸ்ட் யுவர்ஸ். ஒன்லி யுவர்ஸ், பேபி!" மீண்டும் ஆரவியின் நெற்றி, 'முழுவதும் உனக்கே உனக்கு' என விபுநந்தனின் இதழுக்கு இடமளித்தது.

கள்ளூறும் காதல் விழிகளால் கதை பேசியவளின் மூக்குத்தியைத் தடவி, உதடுகளை வருடி, "வீசாதே மழை மேகம் எனக்கு...
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு…" என்று அவன் பாட,

அவன் அவஸ்தையில் குளிர்காய எண்ணி வேண்டுமென்றே, "அருகினில் வா அருகினில் வா
இடைவெளி வலிக்குதே...
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே…" என்று பாடிக் கிளுக்கிச் சிரித்தாள்.

"ராட்சசி! கொன்னுடுவேன் போடி!"

விளையாட்டை விடுத்து, 
'நீ தரும் உச்சந்தலை முத்தம்
நில்லாமல் வேண்டும் நித்தம் நித்தம்!
முத்தத்தில் என்னுயிர் கொள்ளும் பித்தம்
முச்சூடும் விரும்பி ஏற்கவே சித்தம் சித்தம்!!' என மனதிற்குள்ளாக தான் கவிதை எழுதி மடித்தாள். அதை நீள் விழிகள் டிஜிட்டல் திரையிட்டு காட்டியதோ?!

"இனஃப் மாமி! இப்டியே நீ பார்த்துட்டு இருந்தா, ஐ வோண்ட் பீ இன் மை கன்ட்ரோல்!" என்றான், நான்கடி தள்ளி நின்று கொண்டு!

"ச்சு! யூ ஆர் பேட், விபு!" என்று உதட்டைச் சுளித்துவிட்டு போய்விட்டாள். 

"ஹாஹா... பயப்படாம என்னை நினைச்சிக்கிட்டே தூங்கு! ஹேவ் 'ஆர்விபு' ட்ரீம்ஸ்!" என்று சிரித்தபடி கதவை சாத்திவிட்டு தூங்கச் சென்றான்.

'விபு'விடம் நாளை அந்த பெண்ணைப் பற்றி சொல்லி விட வேண்டும்' என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்த ஆரவி ஏதேச்சையாக பார்க்க அவளறைக்கு அடுத்த... அதாவது மாடியின் இடப்புறத்தில் முன்னதாக இருந்த அறையின் கதவு, சாத்தி வைக்காமல் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. அப்போது தான் ஆரவிக்கு நினைவு வந்தது, மேலே உள்ள மற்ற அறைகளை இன்னமும் சோதனை செய்யவில்லையென! 

எப்படியும் தூக்கம் வரப் போவதில்லை. அந்த பெண் வேறு தன்னைத் தூங்க விடுவாளோ என்னவோ? இவனும் இப்படி துரத்திவிட்டு விட்டான். எனவே அந்த அறையையாவது பார்க்கலாம் என்றெண்ணி, மாடி ஹாலில் உள்ள விடிவிளக்கின் வெளிச்சத்தில் மெதுவாக சென்று அவ்வறையின் கதவைத் திறந்தாள்.

நெஞ்சுக்குள் அச்சம் படர, இருட்டுக்குள் மூழ்கியிருந்த அறைக்குள் தயங்கியவாறே சென்று ஸ்விட்ச் போர்டைத் தேடி விளக்கைப் போட, ஆரவியின் இதயம் ஒரு முறை எகிறி குதித்தது. ஓர் மூச்சுத் திணறலோடு நெஞ்சின் மேல் கை வைத்துக்கொண்டாள். 

காரணம், அறையின் நடுவில் இருந்த வட்ட வடிவ கட்டிலில் அந்த அரூபப் பெண் அமர்ந்திருந்தாள். ஏற்கனவே பார்த்திருக்கிறாள் தான் என்றாலும், இப்போது விளக்கைப் போட்டதும் திடுமென பார்த்ததும் ஆரவி பயந்துவிட்டாள்.

அந்த பெண்ணும் இவளைப் பார்த்ததும், "பயந்துட்டியா? ஸாரி ஆரவி." என்று வருந்தியவள் சற்று வியப்பாக, "நீ இன்னும் தூங்க போகலயா?" என்று வினவினாள். இந்தப் பெண் இங்கே ஏன் வந்தாள் என்ற கேள்வி மனதில் தோன்றி மறைந்தது.

அவளைக் காட்டமாக பார்த்த ஆரவி, "யாரு நீ? விபு ரூம்க்கு நீ எதுக்கு போன? அதுவும் நான் வரும் போது என்ன பண்ணிண்டு இருந்தே!" என்று முகத்தை சுளித்தாள்.

அவள் உருவமில்லா அரூபம் என்றாலும் கூட, அவள் செய்ததை ஆரவியால் ஜீரணிக்க முடியவில்லை. அத்தனை தூரம் விபுநந்தனை நெஞ்சில் நிறைத்து வைத்திருக்கிறாள். இவளின் இந்த ஜென்மம் முழுதும் அவன் தரும், நெற்றி முத்தங்களை மட்டுமே கடன் வாங்க சித்தமாயிருக்கிறாள். அவனின் பெருங்காதல் தன் மரணம் மட்டும் வேண்டுமென பேராசை கொள்கிறாள். ஆதலாலேயே அப்பெண்ணின் செயலில் உண்டான கோபம் இப்படி வெளிப்படுகிறது.

"ஆரவி! ஜஸ்ட் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் டாக்!" என்ற அவளின் குரலில் கன்டனம்!

"அப்டி தான் பேசுவேன். நீ மட்டும் சென்ஸோடவா செஞ்ச? ச்சை! கருமம்!" 

"ஆரவீஈஈ!!" அவளின் சாந்த முகம் நொடியில் நெருப்பாய் மாறி ஜொலித்தது. கண்களின் பிரகாசம் இன்னும் கூடியது. இதழ்கள் இறுகி, பற்கள் நெறிபடும் சப்தம் அந்நிசப்த அறையில் அபஸ்வரமாய் கேட்டது. 

ஆரவி எச்சிலை விழுங்கி அச்சத்தோடு சுவரை ஒட்டியவாறு நின்றாள். கழுத்திலிருந்து இறங்கிய வியர்வைத் துளி பயமாய் தொண்டைக் குழியில் தஞ்சம் புகுந்தது. 

அதைப் பார்த்ததும் சட்டென தணிந்த பெண், "ச்சச்ச... ஆரவி! பயப்படாத! நீ நந்தாவை விரும்பற இல்ல? அதான் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு கோவப்படற? ம்ம்??" என்று நொடியில் முக பாவனையை மாற்றி கனிவாய் புன்னகைத்தாள்.

ஆரவி பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவள் மனம் புரியவே, "ஆரவி! அந்த டேபிள் ட்ரா'ல ஒரு சாவி இருக்கும். அதை எடுத்து இந்த சின்ன கப்போர்ட் இருக்குது பாரு! அதைத் திறயேன்..." எனவும்,

"நீ யாருனு இன்னும் சொல்லவே இல்லயே?" வெடுக்கெனக் கேட்டாள் இவள்.

"சொல்றேன் ஆரவி. அதுக்கு தான் அதைத் திறக்க சொன்னேன்." எனவும்,

மெதுவாக சென்று சாவியை எடுத்து அவள் சொன்ன அந்த அலமாரியைத் திறந்தாள். 

"அந்த நடுத்தட்டுல நிறைய ஃபோட்டோ ஆல்பம்ஸ் இருக்கும். அதை எடு!"

எடுத்தாள்.

"ம்ம்! திறந்து பாரு ஆரவி."

திறந்தாள்!
பார்த்தாள்!!
திகைத்தாள்!!!

பூக்கும்🌻🌺 



Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.