Skip to main content

Posts

Showing posts from November, 2025
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 26

அத்தியாயம் 26 வியாழக்கிழமை காலையில் ஆரவி தலையைத் துவட்டியவாறே, "விபு! காஃபி ரெடியா?" எனக் கேட்டவாறே கீழிறங்கும் போது, மிகச் சரியாக அதே நேரத்தில் விபுநந்தனின் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே வந்தனர். விபுநந்தன் சமையலறையில் வழக்கம் போல் ஷார்ட்ஸூம் டீ-ஷர்ட்டுமாகவும், காதில் வாக்மேனுடனும் நின்று பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தான். குட்டிப் பையன் யதுநந்தன் ஓடி வருவதை திறப்பு வழியே கண்டவன், தோளில் கிடந்த கிச்சன் கிளாத்துடன் வெளியே வந்து அனைவரையும் பார்த்துவிட்டு ஆடு திருடிய கள்ளனைப் போல் திருதிருவென முழித்தான்.  ஆரவியையும் தம்பியையும் மாறி மாறிப் பார்த்த தான்யா, "அடப்பாவிஈஈ!!! சொன்ன மாதிரி நிஜமாவே இந்த பொண்ணைக் கடத்திட்டு வந்துட்டியா?" என்று அநியாயத்திற்கு அதிர்ந்து போய் வாயைப் பொத்தினாள். "என்னாதூஊஊ!!! பொண்ண…. கடத்திட்டு வந்துட்டானாஆஆ?? ம்மா! ம்மா!! இவன் செய்யாதது இந்த ஒரு வேலை தான்மா! இப்ப அதையும் செஞ்சிட்டான். போச்சு போங்க! நாளைக்கு நீங்க லேடீஸ் க்ளப்ல எப்டிமா தலை நிமிர்ந்து நடப்பீங்க? அய்யகோ!!!" என்று ரிஷிநந்தன் வேண்டுமென்றே ஏற்ற இறக்கத்தோடு கண்களை உருட்டி உ...

ஸ்கார்பியோ காதல் - 16

  அத்தியாயம் 16 விமான நிலையம் அருகே சாலையில் ஓரமாக கோபத்துடன் நின்றிருந்தது, அஸ்வத்தின் ஸ்கார்பியோ! தன்னருகே இருந்த அம்ருதாவை இமைக்காமல் பார்த்தான் அஸ்வத். அவனைத் தன் கோபப் பார்வையால் நனைத்துக் கொண்டிருந்தாள் அவள். “பொறுமையா இருக்க வேண்டிய நேரம் இது! இப்டி எடுத்தோம் கவிழ்த்தோம்னு அவசரப்பட வேணாம் அஸ்வத்!” நெடுமூச்சுடன் முகத்தை இரு கைகளாலும் அழுந்தத் தேய்த்து, தலையைக் கோதி, பிடறியைக் கட்டிக்கொண்டு கழுத்தைத் திருப்பி அவளை அழுத்தமாகப் பார்த்தான். “என் இடத்துல இருந்து யோசிங்க டாக்டர்! ஆள் யாருன்னு தெரிஞ்சப்புறம் நான் இவ்ளோ பொறுமையா இருக்கறதே பெரிய விஷயம்!” உணர்ச்சி வசப்பட்டிருப்பவனைக் கட்டுப்படுத்தினாள். “ப்ச் புரியுதுங்க சர்! ஆனா இன்னொருத்தனையும் கண்டுபிடிக்கணும் இல்ல? இப்போ நமக்கு இருக்க துருப்புச் சீட்டு இவ தானே? அதையும்  கிழிச்சு போட்டுட்டா அடுத்த ஆளை எப்டி கண்டுபிடிப்பீங்க?”  “டாக்டர்!” என செய்வதறியாத பிள்ளை போல் தன்னைப் பரிதாபமாக பார்ப்பவனைக் கண்டு இவளுக்கு அவனைத் தேற்றச் சொல்லி உள்ளம் வருந்தியது.  மாலையில் தன் தோழி லேகாவைக் காணச் சென்ற அம்ருதாவை ஆர்பாட்டமாக வரவேற்ற...

சீதையின் பூக்காடு - 25

அத்தியாயம் 25 முதலில் தட்சிணாமூர்த்திக்கு என்னவாயிற்று என்று பார்த்துவிடுவோம். கதைமாந்தர்கள் வாய்மொழியாக கூறினால் கதை இன்னும் இழுக்கும்.‌ எனவே நானே சுருங்க கூறிவிடுகிறேன். பொதுவாக குடும்பத்தினர் யாரேனும் இங்கே தங்க வரும் போது வீட்டினைப் பராமரிக்கும் தட்சிணா, கிருஷ்ணாவிற்கு தேவையான சமையல் பொருட்களோடு தங்களின் தேவைக்கும் வாங்கி வந்துவிடுவர். அப்போது இருவரில் ஒருவருக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த சில நாட்களுக்கு மட்டும் விடுப்பிற்கு ஊருக்குள் இருக்கும் தங்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். காட்டிற்குள் ஒற்றை வீடாய் இருப்பதனால் வேலையில் இருக்கும் யாரும் குடும்பத்தோடு இங்கே தங்குவதை ரகுநந்தன் அனுமதிக்கவில்லை. எனவே இவர்கள் இருவர் மட்டும்தான் இங்கே!  அனைவரும் அவரவருக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள, விபுநந்தன் மட்டும் தன் சோம்பேறித்தனத்தால் எந்த பொருளையும் வாங்கி வரமாட்டான். எதுவானாலும் தன் தேவைகளை தட்சிணாவிடம் கூற, அவன் ஊருக்குள் சென்று வாங்கி வந்து தருவான். அப்போது அவன் வீட்டிற்கு தேவையான பொருட்களும் வாங்கக் கிடைக்குமாதலால் மகிழ்ச்சியாகவே சென்று வருவான்.  இவர்கள் வீட்டில் யாரும் வேலைகா...

சீதையின் பூக்காடு - 24

அத்தியாயம் 24 கடந்து போனதை ஆரவியிடம் கூறிவிட்டு அதிலிருந்து மீள முடியாமல் தவித்த விபுநந்தன், அவள் ஆறுதலாக மடிதாங்க வந்தாலும் மறுத்துவிட்டு, தனிமையை நாடி செல்ல பார்த்தான். உணர்ச்சி மிகுதியில் தவித்தவனின் தோளணைத்து, "கால்ம் டவுன் விபு. ப்ளீஸ் ஜஸ்ட் பீ நார்மல்!" என்றாள். "நான் கொஞ்சம் என் ரூம்ல தனியா இருந்துட்டு வர்றேன் ஆரவி." என்று அவன் எழவும்,  அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு, "தனியா அங்கே போய் என்ன பண்ண போற விபு? நேக்கு பசிக்கறது. சாப்பிட ஏதாவது செஞ்சு கொடு!" என்றாள், அதிகாரமாக! சுள்ளென்ற கோபத்தோடு, "கொஞ்ச நேரம் கூட தனியா விட மாட்டியா? உனக்கு வேணும்னா நீயே சமைச்சு கொட்டிக்கோயேன்." எனக் காய்ந்தவனின் கோபத்தை தூசென புறம் தள்ளியவள்,  அழிச்சாட்டியமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு, "கடத்திண்டு வந்து காதல் பண்ணுனு கம்பெல் பண்றவன் நீ! அப்ப நீதான் நேக்கு சமைச்சுப் போட்டு நன்னா கவனிச்சுக்கணும்." என்றாள்.

சீதையின் பூக்காடு - 23

அத்தியாயம் 23 இந்த ஒரே ஒருமுறை தனக்காக தன் தம்பியை மன்னித்து விடுமாறும் இனி அவனோடான அவள் வாழ்க்கையில் அவன் என்ன தவறிழைத்தாலும் தக்க தண்டனை கொடுத்துக் கொள்ளுமாறும் சீதா ஆரவியிடம் மன்றாடியிருந்தாள். நீண்ட நேர கெஞ்சலுக்கு பின் சரியென்றிருந்தாள் ஆரவி. இங்கே இவள் வரவில்லை என்றால் சீதாவைக் காண முடிந்திருக்காதல்லவா? அந்த ஒரு காரணத்திற்காகவே விபுவை மன்னிக்க ஒத்துக்கொண்டாள்.  இருப்பினும், அவனிடம் வீம்பிற்காகவேணும் முகத்தைத் திருப்பிக்கொண்டே திரிந்தாள். அவனும் சளைக்காமல் காதல் செய்துகொண்டே இருந்தான். சீதாவும் இருவரின் ஊடல்களை ரசித்தவாறே சுற்றி வந்துகொண்டிருந்தாள். இப்போது அவ்வீட்டில் மூவரும் ஆளுக்கொரு தூணைப் பற்றி கொண்டு நின்றிருந்தனர். விழியோரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்...  விபுநந்தனின் உதவியால், ப்ளேயரின் மூலம் ஏற்கனவே தன்னுள் பதித்து வைத்திருந்த காதல் பாடல்களை ஒவ்வொன்றாய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது, அந்த குறுந்தகடு.  அவன் மேல் இருந்த கடுப்பைத் தொலைக்காட்சியின் மேல் காட்டியவள், அதை அணைத்துவிட்டு மீண்டும் சென...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.