Skip to main content

Posts

Showing posts from October, 2025
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 16.2

அத்தியாயம் 16.2 "ஓய் தான்யாக்கா! வந்த நாலு நாளா நானும் பார்க்கறேன். ஒண்ணு அந்த ஐ ஃபோனை நோண்டிட்டு இருக்க. இல்ல லேப்புக்குள்ள தலையை விட்டுட்டு இருக்க. அப்டி என்ன பிஸினஸ் டீல் பண்ணிட்டு இருக்க? மச்சான் அதுக்குள்ள உன் கையில மேனேஜ்மென்ட்'அ மொத்தமா ஒப்படைச்சிட்டாரா?"  "நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்பாம போடா. அப்டியே உங்க மச்சான் என்னை நம்பி குடுத்துட்டாலும்... எனக்கு இருக்கற ஒரே என்டர்டெயின்மென்ட் இது தான்." என்று அலைபேசியைக் காட்டினாள். "ரொம்ப அலுத்துக்கற போலயே?" "ஹான்! இங்கேயும் என்னைக் கண்டுக்காம எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க போயிடறாங்க. நான் வேற என்ன பண்றதாம்?" "ஏன் அம்மா கூட ஸ்கூலுக்கு போகலாம். அப்பா கூட ஹோட்டல் போயிருக்கலாம். இல்ல அண்ணியோட ரிசார்ட்டாவது போயிருக்கலாம்." "அதுக்கு நான் இங்க இருந்து இந்த ஸ்டோரீஸே படிச்சிடுவேன்டா நந்தா." "படிக்கற காலத்துல தான் கைட்குள்ள (guide) கதை புக்கை ஒளிச்சு வச்சு படிச்சு, அம்மாகிட்ட அடி வாங்குவ. கல்யாணம் ஆனதுக்கப்புறம் கூட திருந்தலயா நீ?" "திருந்துறதுக்கு நான் என்ன குடி...

சீதையின் பூக்காடு - 16.1

அத்தியாயம் 16.1 புதன்கிழமை! தன் முன் இருந்த புகைப்படத் தொகுப்பைப் பார்த்து சிலையாக அமர்ந்திருந்தான் விபுநந்தன். காலையில் தன் மூத்த தமக்கையின் அறையில் இருந்து வெளியே வந்த ஆரவியைப் பார்த்ததுமே துணுக்குற்றான். அவள் முகமும், இரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்ததால் சிவந்து, சிறுத்திருந்த கண்களுமே அவளுக்கு தன்னைத் தெரிந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின. எப்படி என யோசித்தவனுக்கு விடையாக அவள் கைகளில் இருந்த புகைப்படத் தொகுப்பு சிரித்தது. காலையில் எழுந்ததுமே சீதாவைத் தான் தேடினாள் ஆரவி. மிச்ச கதையைக் கேட்க வேண்டுமல்லவா? அறையை சுற்றிலும் தேட, திடுமென காற்றோடு காற்றாக ஜன்னலின் வழி வந்தவளைக் கண்டு கொஞ்சமும் திடுக்கிடாமல், "எங்க போயிட்டேள் இவ்ளோ காலம்பரயே?" என்று சோம்பலாக உடலை நெளித்த படி கேட்டாள். "ஓய்! என்கிட்ட கொஞ்சமாவது பயமிருக்கா உனக்கு?" என்று அவள் பதில் கேள்வி கேட்க, "நீங்க என்ன பேயா? பூதமா? நேக்கென்னத்துக்கு பயமாம்?" என்றாள், சாவகாசமாக! "மணிக்கொருக்க மயங்கின பொண்ணா நீ?" என்று கேலி செய்தவள், "நான் பேய் தான?" என்றாள், ஒருவித வேதனைச் சிரிப்புடன...

சீதையின் பூக்காடு - 15

அத்தியாயம் 15 இதுவரை வகுப்பில் ஏதேனும் பிரச்சினை என்றால் பேராசியர்களிடம் பேச தயங்கும் மாணவர்கள் சீதாவிடம் தான் சொல்வார்கள். இவள் மனதிற்கு சரியாகப்பட்டால் உடனடியாக பேசி பிரச்சனையை சுமூகமாக்கிவிடுவாள். இது இரண்டாம் ஆண்டாக இருந்தாலும் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் ராகிங்'ன் போதே சண்டையின் மூலம் சீதாவின் புகழ் கல்லூரியில் ஆங்காங்கே பரவியிருந்தது. எனவே இப்போதும் கஷ்டம் தீருமோ அல்லவோ சீதாவிடம் தன் சொந்த பிரச்சனையைக் கூறியதால் பாதி பாரம் தீர்ந்தாற் போல் உணர்ந்தாள் சாரதா.  இரண்டாம் ஆண்டின் இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முடிவுகள் வர ஒரு மாத காலமேனும் ஆகும் என்பதால் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். முடிவெடுத்ததைப் போலவே, அந்த வார இறுதியிலேயே சாரதாவுடன் அவளின் கிராமத்திற்கு சென்ற சீதா, ஊர்க்காரர்களை விசாரித்துவிட்டு பயனில்லை என்றதும், சாரதாவையும் அழைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரங்களில் தோல் தொழிற்சாலை எங்குள்ளது என்று அலசலானாள். சீதாவின் இணையதளத் தேடலிலும் அவளின் தந்தை ரகுநந்தன் தந்த தகவலின் அடிப்படையிலும் சாரதாவின் கிராமத்திற்கு அருகில் எந்த தோல் தொழிற்சாலையும் இல்லை எனத...

ஸ்கார்பியோ காதல் - 12.2

அத்தியாயம் 12.2 அஸ்வத்திற்கு அம்ருவின் கோபம் புதிதாக தெரிந்ததுவோ? ஆச்சரியம் போல் லேசாக புருவம் உயர்த்தி சிரித்தான். “அது செல்லப் பேருன்ற கான்ஷியஸே எனக்கில்ல டாக்டர். பழக்கத்துல சொல்லிட்டேன். ஸாரி…” இதழ் அழுத்தி கன்னக்குழியுடன் முறைப்பாகப் பார்த்தவள், “அந்த லொகேஷனுக்கு நீங்க போனீங்களா? கோவளத்துல எந்த ஏரியா?” எனக் கேட்க, அஸ்வத்தின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தது. அம்ருவின் முகம் பார்க்காமல் சொன்னான். “ம்ம் போனேன். பட் அது அவனோட சொந்த ஃபார்ம் ஹவுஸ் இல்ல. ரேவ்ஸ்… ஸாரி அவளோட இருக்க மட்டும் அந்த வீட்டை யூஸ் பண்ணிருக்கான்.” அதற்குமேல் அந்த பேச்சினைத் தொடர அசூயைக் கொண்டவள், புலனச் செய்திகளில் கடைசியாக இருந்த உரையாடல்களை வாசித்தாள். ‘Ma’am, baby ku edhuvum ahadhunu sonninga… But Innaiku ava school la mayangi vizhundhutalam.’ ‘Rev, oru medicine edutha side effects vara dhana seiyum?’ ‘Ma’am, bayama irukudhu😥’ ‘Nothing to worry, Rev!’ ‘Yes, bayapadadha ma… Nee baby a nalla observe panni avaloda health condition a engaluku update pannu and whatever happens don't stop our syrup!’ ‘Ok Sir.’ ‘...

ஸ்கார்பியோ காதல் - 12.1

Amru at Aswath's home அத்தியாயம் 12.1 அஸ்வத் வீடிருக்கும் பகுதி தாம்பரத்தில் உள்ளடங்கி இருந்தது. பணக்காரர்கள் வசிக்கும் விசாலமான தெரு. தெருவின் முடிவில் சற்று தள்ளி புதிதாய் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கால்கள் ஊன்றி எழும்பிக் கொண்டிருந்தன.  அம்ருதா எந்த தைரியத்தில் அவன் வீட்டிற்கு வந்தாள் என்று தெரியாது. அதிலும் அவளின் மகிழுந்தை எடுத்து வந்திருக்கவில்லை. அவள் தெருவுக்குள் நுழைந்ததும் வீட்டினைத் தேட தேவையற்று அஸ்வத் வெளிவாசலில் வந்து நின்றிருந்தான். ஊபர் வாகனத்தில் வந்து இறங்கியவளைக் கண்டவன், அவளுக்கு பின்னேயே வந்த இரு சக்கர வாகனம் சிறிது தொலைவில் நின்றுவிட்டதையும், அந்த ஹெல்மெட் தலை இவர்கள் பக்கம் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டதையும் கவனித்தான். ஏனோ சந்தேகம் தோன்றிவிட, கூர்ந்து பார்த்து அவ்வாகனத்தின் எண்ணை மனிதில் குறித்து வைக்க, அம்ருதா அலைபேசியில் கட்டணத்தைச் செலுத்தித் கொண்டிருந்தாள். “வாங்க டாக்டர். உங்க கார் என்னாச்சு?” அவனோடு உள்ளே நடந்தபடி சொன்னாள்.  “சொன்னா சிரிப்பீங்க. மை‌ பேரண்ட்ஸ் வோண்ட் லெட் மீ டிரைவ் தி கார்! இப்போ அண்ணா ஊர்ல இல்லைன்னு தான் ஹாஸ்பிடலுக்கு மட்ட...

சீதையின் பூக்காடு - 14

அத்தியாயம் 14 'விபுநந்தன் காதலென்று கூறி கழுத்தறுத்துவிட்டான்; தானும் மடத்தனமாக அவனிடம் பிரியத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று ஆரவி ஒரு மூச்சு குமுறினாள். காதலின் அடிப்படையே உண்மையும் நம்பிக்கையுமல்லவா? இங்கே தன்னிடம் உண்மையாக இல்லாதவனை, தான் எங்ஙனம் நம்புவது? என்று குழம்பி தவித்தாள். இதற்கிடையே சீதாவைப் பார்க்க, 'பவித்ரமான மலரைப் போல் இருப்பவளுக்கு எப்படி இந்நிலை வந்திருக்கக்கூடும்? அவள் தன்னிடம் பேச விழைந்த காரணமென்ன?' என்று அது வேறு மூளையின் ஒரு புறம் ஓடிக் கொண்டிருந்தது. சற்றுநேரம் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சையெடுத்து, தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டு விழிகளைத் திறந்து சீதாவைப் பார்த்தாள். அவள் அதே புன்னகை மாறாத முகத்தோடு கேட்டாள். "டூ யூ ஃபீல் பெட்டர் நௌ, ஆரவி?"  "நீங்க என்னான்ட ஏதோ பேச வந்த மாதிரி இருந்ததே?"  சின்னதாக சிரித்துக்கொண்டு, "இல்ல... இந்த ஏழு வருஷத்துல முதல்முதலா ஒரு பொண்ணு கண்ணுக்கு நான் தெரிஞ்சிருக்கேன். அதான் சும்மா உன்கிட்ட பேச ஆசை வந்துடுச்சு." என்றாள். 'ஏழு வருஷமா? அப்ப…' ஆரவியால் வாய்விட்டு கேட்க முடியவ...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.