அத்தியாயம் 22 தெருமுனை விநாயகர் காலை பூஜை முடிந்து, பூமாலை சகிதம் தன் பாதமருகே போடப்பட்டிருந்த பூக்கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தார். பழைய காம்பவுண்ட் சுவர்கள் ஈரளிப்பில் இருந்தது. தெருக்களைக் கடந்து பிரதான வீதிக்கு வந்தால், விளம்பர பலகையில் கையில் 7UP உடன் நின்றிருந்த அனிருத் தேநீர் கடையின் வாசனையையும் மக்களின் சுவாரஸ்ய பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். தள்ளுவண்டியில் சாம்பார் வெங்காயம் மூன்று கிலோ நூறு ரூபாய் என கூவிக் கொண்டிருந்தார் அதன் விற்பன்னர். அப்பா, மகன் இருவரும் காலை நேர நடைப்பயிற்சியில் இருந்தார்கள். லெதர் தொழிற்சாலையிலிருந்து வந்த மணத்தினை உள்வாங்கியபடி மெதுவே ஆரம்பித்தான் ஹரிஷ். “என் ஃப்ரெண்ட் ரிஷி பிரகாஷ் தெரியும்ல’ப்பா? கைனோ ஸ்பெஷலிஸ்ட்!” “ஆ… போன வருஷம் வில்லிவாக்கத்துல புதுசா மெட்டர்னிடி கிளினிக் திறந்திருக்கான்னு போயிட்டு வந்தியே…” “ஆமாப்பா, அவன்தான்! என் கல்யாணத்துக்கு வந்திருந்தப்போ உன் கல்யாணம் எப்போடா’ன்னு கேட்டேன். அவங்க வீட்லயும் அலையன்ஸ் பார்த்துட்டு இருக்கறதா சொன்னான். அதான்… நம்ம அம்முவுக்கு பார்க்கலாமான்னு தோணுச்சு…” நடராஜன் பாதையிலிருந்து திரும்பி மகன...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗 கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...