Skip to main content

Posts

Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 22

அத்தியாயம் 22 தெருமுனை விநாயகர் காலை பூஜை முடிந்து, பூமாலை சகிதம் தன் பாதமருகே போடப்பட்டிருந்த பூக்கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தார். பழைய காம்பவுண்ட் சுவர்கள் ஈரளிப்பில் இருந்தது. தெருக்களைக் கடந்து பிரதான வீதிக்கு வந்தால், விளம்பர பலகையில் கையில் 7UP உடன் நின்றிருந்த அனிருத் தேநீர் கடையின் வாசனையையும் மக்களின் சுவாரஸ்ய பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். தள்ளுவண்டியில் சாம்பார் வெங்காயம் மூன்று கிலோ நூறு ரூபாய் என கூவிக் கொண்டிருந்தார் அதன் விற்பன்னர். அப்பா, மகன் இருவரும் காலை நேர நடைப்பயிற்சியில் இருந்தார்கள். லெதர் தொழிற்சாலையிலிருந்து வந்த மணத்தினை உள்வாங்கியபடி மெதுவே ஆரம்பித்தான் ஹரிஷ். “என் ஃப்ரெண்ட் ரிஷி பிரகாஷ் தெரியும்ல’ப்பா? கைனோ ஸ்பெஷலிஸ்ட்!” “ஆ… போன வருஷம் வில்லிவாக்கத்துல புதுசா மெட்டர்னிடி கிளினிக் திறந்திருக்கான்னு போயிட்டு வந்தியே…” “ஆமாப்பா, அவன்தான்! என் கல்யாணத்துக்கு வந்திருந்தப்போ உன் கல்யாணம் எப்போடா’ன்னு கேட்டேன். அவங்க வீட்லயும் அலையன்ஸ் பார்த்துட்டு இருக்கறதா சொன்னான். அதான்… நம்ம அம்முவுக்கு பார்க்கலாமான்னு தோணுச்சு…” நடராஜன் பாதையிலிருந்து திரும்பி மகன...

ஸ்கார்பியோ காதல் - 21

அத்தியாயம் 21 அன்று ஹரிஷின் சிந்தனை முழுவதையும் அஸ்வத்தே ஆக்ரமித்திருந்தான்.  பொதுவாக ஒரு மனநல ஆலோசனை அல்லது சிகிச்சை (Psychiatric session) என்பது ஒரே அமர்வில் முடிவதல்ல. அது ஒரு படிப்படியான செயல்முறை. அதன்படி குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு அமர்வுகள் சென்றால்தான் நோயாளியுடைய மனநிலையின் முன்னேற்றம் பொறுத்து நீண்டநாள் திட்டங்களையும் சொல்ல முடியும். ஆனால் நிச்சயம் அஸ்வத் தன்னிடம் முறைப்படி சிகிச்சைக்காக வரப் போவதில்லை. அதனால் குழந்தைக்கு முப்பதாம் நாள் படையல் என்று அஸ்வத் சொன்னதைச் சாக்கிட்டு, அவனைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள அவன் வீட்டிற்கு சென்றிருந்தான் ஹரிஷ். வீட்டின் உள்வாயிலில் கால் வைத்தபோதே எதிரே இருந்த சுவரின் அடிப்பகுதியில் குழந்தையின் முழு உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. சின்ன பற்கள் காட்டி கன்னம் குழிய சிரிக்கும் குழந்தை முக ஜாடையில் குட்டி அஸ்வத் போலிருந்தாள். வெள்ளை நிற உடையில் அவள் ஓடி வருவதைப் போல தத்ரூபமாக HD செய்யப்பட்டிருந்த புகைப்படத்தின் உயிரோட்டம், பார்த்த ஒரு நொடியில் இந்த மருத்துவனின் மனதையே கலக்கிவிட்டது. இவளுக்கு இப்படியான முடிவு நிகழ்ந்திருக்க வேண்டா...

சீதையின் பூக்காடு - 31.2 (final)

அத்தியாயம் 31.2 (final) பரமானந்தன் யோசிப்பதைப் பார்த்துவிட்டு மேலும் சொன்னார். "சரி, அதான் ரெண்டு வருஷம் டைமிருக்கே? அவன் நடவடிக்கை எப்டி இருக்குதுன்னு வெய்ட் செஞ்சு பார்ப்போம். நல்ல பையனா இருந்தா அந்த குடும்பத்துக்கு போக போற நம்ம ஆரவி ப்ளெஸ்ஸிங் கேர்ள் தான்!" என்றவருக்குமே விபுவின் செயலில் ஆத்திரம்தான். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்றால் எதற்கும் துணிந்தவர்களாகவே தான் இருக்கின்றனர்.  இருப்பினும் அவர் நண்பனை பொறுமைக் காக்க சொன்னாரெனில், அதன் காரணம் தவறிழைத்தவனை நம் வீட்டுப் பெண் ஏன் காட்டிக் கொடுக்கவில்லை? என்ற கேள்வியும், ரகுநந்தன் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த மனிதர் என்பதாலும் மட்டுமே! பரமானந்தன் ஒன்றும் காதலை எதிர்ப்பவரல்லவே? எனவே நண்பனின் கூற்றை ஏற்றுக்கொண்டவர், இந்த ஒன்றரை வருடங்களாக விபுவை டிடெக்டிவ் தேவ் மூலமாக கண்காணித்து வந்தார். விபுவின் செயல்கள் திருப்திகரமாகவே இருந்தது. அத்தோடு பரமேஸ்வரியும் ஆரவிக்கு விபுவின் மேல் விருப்பம் என்று சொல்லவும், சரி தானென்று தாமதிக்காமல் ரகுவை அழைத்துக் கோவிலுக்கு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். விபுவிற்கு மா...

சீதையின் பூக்காடு - 31.1

அத்தியாயம் 31.1 ஒன்றரை வருடத்திற்குப் பிறகு… ஒரு ஞாயிறு தினம்!  ஆரவி, தான்யாவின் மகள் சீதாலட்சுமியோடு காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஒன்றரை வயது மழலையின் மொழியில் இவளுக்கு என்ன தான் புரியுமோ! இருவரும் மணிக்கணக்கில் அரட்டையடித்துக் கொண்டிருப்பர். "மன்னி, இன்னிக்கு நீ என்ன சாப்பிட்ட? உங்கம்மா தர்ற அந்த பட்டர் சாண்ட்விச்சை சாப்பிடவே கூடாது. நன்னா மசிச்ச, நெய் போட்ட பருப்பு சாதம் வேணும் சொல்லு! சரியா?" "ம்ம்… யம்மி…" "ம்ஹூம்! உன் அம்மா சமையல் டம்மி! உன் விபு மாமா செய்ற கீரை கூட்டுதான் யம்ம்மி…" அந்த 'யம்மி' பிரபஞ்சத்திலுள்ள மொத்த ஏக்கத்தையும் தன்னுள்ளே அடக்கியிருந்தது. அது அவளின் விபுவிற்கான ஏக்கம். குட்டி சீதா பிறந்த அன்று இருவரும் சந்தித்ததுதான். அதன்பின் இந்த ஒன்றரை வருடத்தில் சொற்பப் பொழுதாய் தொலைபேசி உரையாடல்கள் மட்டுமே! எப்பொழுதேனும் சில நிமிடங்கள் காணொளி அழைப்பில் பேசிக்கொள்வார்கள்.  ஆரவி இப்பொழுது பகுதி நேர வேலைக்கு செல்வதோடு, பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் ப்ரூஃப் ரீடராகவும் பணியாற்றுகிறாள். எனவே நந்தனுடன் பேசும் நேரங்கள் மிகக் குற...

சீதையின் பூக்காடு - 30.2

அத்தியாயம் 30.2 அவன் சிந்தனையில் சுழன்ற எண்ணத்தின் சாராம்சம் இதுதான்! முதலில் இங்கு வந்து மாட்டிக் கொண்ட பின், அவள் கதையோடு தங்களை சம்பந்தப்படுத்திக் கொண்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்த ஆரவி, இவன் சீதாவின் கடந்த காலத்தை… அதுவும் இவள் கதையில் அக்காவை எழுதியுள்ளாள் என்று சொன்ன பிறகு, அவள் இங்கு இருப்பது போல் தனக்குத் தானே உருவகப்படுத்திக் கொண்டாளோ? கடைசி நாள் பகல் முழுவதும் இவள் சீதாவின் அறையை விட்டு வரவே இல்லையே? அன்று சாப்பிடுவதற்காக எத்தனை முறை வந்து அழைத்தான்?  இன்னும் சொல்லப் போனால் முதலில் இவளிருந்த தான்யாவின் அறையில் தான் இவளுக்கு விருப்பமான நாவல் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை தொட்டுக் கூட பாராதவள் சீதாவின் அறையே கதி என்று கிடந்தாள். இப்பொழுதும் இதோ இங்கே வந்து என்னவோ பசலை நோய் கண்டவளைப் போல் படம் காட்டிக் கொண்டிருக்கிறாள்? இவ்வாறாக இவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் விறுவிறுவென கீழே வந்து நிலவறைக்குள் சென்ற ஆரவி, அங்கிருந்த சீதாவின் மருத்துவப் படிப்பு சம்பந்தமான புத்தகங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டாள். ஏனென்று கேட்ட விபுவிடம், தன் கதையில் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தை...

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.