Skip to main content

Posts

Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 25

அத்தியாயம் 25 காலையில் அஸ்வத் வீட்டிற்கு தேவா வந்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, தான்தான் செய்தேன் என்று அஸ்வத் வாக்குமூலம் அளித்திட, ஹரிஷ் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் தேவாவிடம் நிதானமாக, “நோ இன்ஸ்பெக்டர்!” என்று திடமாகச் சொன்னவன், “ம்ம்… நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?” என்றிட, “என்ன பேசப் போறீங்க, மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்?” எனக் கேட்டான் அஸ்வத். ‘அடங்குறானா பாரு!’  “ரிலேட்டிவ்ஸ் உங்க பர்சனல் பேசறதா இருந்தா தாராளமா பேசுங்க. ஆனா என்னைப் பத்தின விஷயமா இருந்தா என் முன்னாடியே பேசலாம்.” இந்த இடைப்பட்ட நேரத்தில், அஸ்வத்தைத் தான் முன்பே ஒருமுறை அம்ருதாவுடன் அவள் வீட்டினருகே இருக்கும் தேநீர் கடையில் வைத்து பார்த்திருக்கிறோம் என்று நினைவுபடுத்திக் கொண்டிருந்தான் தேவா. அன்று அம்ருவிற்கு ஒரு கையசைப்பை மட்டும் தந்துவிட்டு விடைபெறும் நோக்கில் இருந்தவன் அஸ்வத்தை ஊன்றி கவனிக்கவில்லை.  அதை எண்ணமிட்டபடியே ஹரிஷிடம் கேட்டான். “சொல்லுங்கத்தான், என்ன விஷயம்?” ஹரிஷ் அஸ்வத்தின் மேல் பார்வை வைத்துச் சொன்னான். “தன்வீர் விஷயத்துல இவர் எதுவும் செஞ்சிருக்க முடியாது. அப்டியே செஞ்சிருந்தாலும் அது இவர் ...

ஸ்கார்பியோ காதல் - 24

அத்தியாயம் 24   நேரம் இரவு பதினோரு மணி. வெளியே மழை அடித்து ஊற்றிக்கொண்டிருந்தது. அந்த வரவேற்பறையின் மின்விசிறி சப்தமெழுப்பாமல் சுற்றிக்கொண்டிருக்க, திடகாத்திரமான ஒருவன் ஈர உடுப்புடன் நடுங்கிக் கொண்டிருந்தான். அந்த நடுக்கம் மின்விசிறி தந்த காற்றால் அல்ல; எதிரே இவனையே விழிகளால் கூறுபோட்டுக் கொண்டிருந்த வெள்ளை வேட்டி மனிதரால்! “என்னய்யா எங்கே போனான்னு தெரியலன்னு அசால்ட்டா சொல்ற? இதுக்காகவா இருபத்துநாலு மணி நேரமும் அவன் பின்னாடி அலையறதுக்கு உனக்கு காசு கொட்டி கொடுக்கறேன்?” என்று இன்னமும் காதுகளுக்கு ஒவ்வாத வசைமொழிகளை வாய்க்கு வலியெடுக்கும் மட்டும் பேசினார் அந்த பெரிய மனிதர்!  அவர் தாரகேஷின் அப்பா; சட்டமன்ற உறுப்பினர் சத்யநாதன்! அவரருகே பயம் பரவிய முகத்துடன் தாரகேஷின் தோழி கோகிலலக்ஷ்மி.   “மன்னிக்கணும் தலைவரே! நாலு நாளா நல்ல மழை! அப்டியும் நாங்க அவனை வேவு பார்க்கறதை நிறுத்தல.” என்றவர், அருகிருந்த கோகிலாவைக் காட்டி சொன்னார். "அவன் இந்தப் பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்த வரை உங்களுக்கு ரிப்போர்ட் கொடுத்துட்டோம். இன்னிக்குதான் பசங்க மிஸ் பண்ணிட்டானுங்க. இப்போ வரை அவன் வீட்ட...

ஸ்கார்பியோ காதல் - 23

அத்தியாயம் 23                 நேற்றைக்கு முந்தைய நாள்!  ஹரிஷ் அவன் வீட்டிலிருந்து அதிக தொலைவிலிருந்த ஜிம் ஒன்றின் வெளியே தனது மகிழ்வுந்தில் அமர்ந்திருந்தான். அருகே இருபத்தாறு வயதில் வாட்டசாட்டமான உடலமைப்புடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவன்! இப்போதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று, முகம் கழுவியதில் காயாமல் ஆங்காங்கே ஒட்டியிருந்த நீர்த்துளிகளில் தெரிந்தது. ஜன்னலில் தன்‌ பரந்த முதுகைச் சாய்த்து முழங்கையை இருக்கைப் பகுதியில் பதித்திருந்தவன் சொன்னான். “இந்த ரோலர் பொட்டட்டோக்காகவே செஞ்சு வந்த பிரச்சினை மாதிரி இருக்குது.” அம்ருவை, ‘ரோலர் பொட்டட்டோ’ என்ற அடைமொழியுடன் பேசும் இவனை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அவளிடம், ‘கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டு வம்பிழுக்கும் அவளின் அத்தை மகன் தேவா. அஸ்வத் பார்த்த இரு முறையும் இவன் அங்ஙனமே பேசி வைத்ததில் அது உண்மையென்று நினைத்து, இவனைத்தான் அம்ருதா திருமணம் செய்ய போகிறாள் என்று நம்பிக் கொண்டிருக்கிறான் அஸ்வத். அம்ருதா அண்ணனிடம் அஸ்வத்தைப் பற்றிய அனைத்து விடயங்களையும் தெரிவித்த பின்னர்...

ஸ்கார்பியோ காதல் - 22

அத்தியாயம் 22 தெருமுனை விநாயகர் காலை பூஜை முடிந்து, பூமாலை சகிதம் தன் பாதமருகே போடப்பட்டிருந்த பூக்கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தார். பழைய காம்பவுண்ட் சுவர்கள் ஈரளிப்பில் இருந்தது. தெருக்களைக் கடந்து பிரதான வீதிக்கு வந்தால், விளம்பர பலகையில் கையில் 7UP உடன் நின்றிருந்த அனிருத் தேநீர் கடையின் வாசனையையும் மக்களின் சுவாரஸ்ய பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். தள்ளுவண்டியில் சாம்பார் வெங்காயம் மூன்று கிலோ நூறு ரூபாய் என கூவிக் கொண்டிருந்தார் அதன் விற்பன்னர். அப்பா, மகன் இருவரும் காலை நேர நடைப்பயிற்சியில் இருந்தார்கள். லெதர் தொழிற்சாலையிலிருந்து வந்த மணத்தினை உள்வாங்கியபடி மெதுவே ஆரம்பித்தான் ஹரிஷ். “என் ஃப்ரெண்ட் ரிஷி பிரகாஷ் தெரியும்ல’ப்பா? கைனோ ஸ்பெஷலிஸ்ட்!” “ஆ… போன வருஷம் வில்லிவாக்கத்துல புதுசா மெட்டர்னிடி கிளினிக் திறந்திருக்கான்னு போயிட்டு வந்தியே…” “ஆமாப்பா, அவன்தான்! என் கல்யாணத்துக்கு வந்திருந்தப்போ உன் கல்யாணம் எப்போடா’ன்னு கேட்டேன். அவங்க வீட்லயும் அலையன்ஸ் பார்த்துட்டு இருக்கறதா சொன்னான். அதான்… நம்ம அம்முவுக்கு பார்க்கலாமான்னு தோணுச்சு…” நடராஜன் பாதையிலிருந்து திரும்பி மகன...

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...