அத்தியாயம் 29 செவ்வாய் கிழமை காலை, அனிதா தன் தேடுதலின் முதல்கட்டமாக புத்தகப் பதிப்பகத்தாரின் அலுவலகத்தில் விசாரிக்க, அவர்கள் பரமானந்தத்திடம் சொன்னதையே இவளிடமும் கூறினர். அந்த அலுவலகம் ஒரு ஒடுங்கிய தெருவில் இருந்தாலும், தெருவின் ஆரம்பத்தில் இருந்ததால் அருகில் தேநீர் கடை, ஆட்டோ நிறுத்தம், சாலையோர கடைகள் என்று அந்த இடமே திருவிழா கொண்டதைப் போல் ஜேஜே என்றிருந்தது. முதலில் தேநீர் கடையில் ஆரவியின் புகைப்படத்தைக் காட்டி, அவளின் இரு சக்கர வாகனத்தையும் அடையாளமாகக் கூறி விசாரித்தாள். எப்போதேனும் வந்து போகும் ஆரவியை அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆட்டோ நிறுத்தத்திலும் அவ்வாறே பதில் கிடைத்தது. சற்றுநேரம் யோசித்துவிட்டு, சாலையோர கடைகளில் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு களைத்தாள். ஆரவி காணாமல் போன அன்று மாலையும், மறுநாளும் மழையின் காரணமாக யாரும் கடை போட்டிருக்கவில்லை. எனவே யாருக்கும் எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கையை விடாமல் மீண்டும் சில கடைகளில் விசாரித்தாள். அதிர்ஷ்டவசமாக ஒரு கடை நபரின் மகன், அனிதாவின் சிக்கலான நூல்கண்டின் முனையைப் பிரித்துக் கொடுத்தான். அது என்னவெ...