அத்தியாயம் 29 செவ்வாய் கிழமை காலை, அனிதா தன் தேடுதலின் முதல்கட்டமாக புத்தகப் பதிப்பகத்தாரின் அலுவலகத்தில் விசாரிக்க, அவர்கள் பரமானந்தத்திடம் சொன்னதையே இவளிடமும் கூறினர். அந்த அலுவலகம் ஒரு ஒடுங்கிய தெருவில் இருந்தாலும், தெருவின் ஆரம்பத்தில் இருந்ததால் அருகில் தேநீர் கடை, ஆட்டோ நிறுத்தம், சாலையோர கடைகள் என்று அந்த இடமே திருவிழா கொண்டதைப் போல் ஜேஜே என்றிருந்தது. முதலில் தேநீர் கடையில் ஆரவியின் புகைப்படத்தைக் காட்டி, அவளின் இரு சக்கர வாகனத்தையும் அடையாளமாகக் கூறி விசாரித்தாள். எப்போதேனும் வந்து போகும் ஆரவியை அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆட்டோ நிறுத்தத்திலும் அவ்வாறே பதில் கிடைத்தது. சற்றுநேரம் யோசித்துவிட்டு, சாலையோர கடைகளில் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு களைத்தாள். ஆரவி காணாமல் போன அன்று மாலையும், மறுநாளும் மழையின் காரணமாக யாரும் கடை போட்டிருக்கவில்லை. எனவே யாருக்கும் எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கையை விடாமல் மீண்டும் சில கடைகளில் விசாரித்தாள். அதிர்ஷ்டவசமாக ஒரு கடை நபரின் மகன், அனிதாவின் சிக்கலான நூல்கண்டின் முனையைப் பிரித்துக் கொடுத்தான். அது என்னவெ...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗 கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...