அத்தியாயம் 24 நேரம் இரவு பதினோரு மணி. வெளியே மழை அடித்து ஊற்றிக்கொண்டிருந்தது. அந்த வரவேற்பறையின் மின்விசிறி சப்தமெழுப்பாமல் சுற்றிக்கொண்டிருக்க, திடகாத்திரமான ஒருவன் ஈர உடுப்புடன் நடுங்கிக் கொண்டிருந்தான். அந்த நடுக்கம் மின்விசிறி தந்த காற்றால் அல்ல; எதிரே இவனையே விழிகளால் கூறுபோட்டுக் கொண்டிருந்த வெள்ளை வேட்டி மனிதரால்! “என்னய்யா எங்கே போனான்னு தெரியலன்னு அசால்ட்டா சொல்ற? இதுக்காகவா இருபத்துநாலு மணி நேரமும் அவன் பின்னாடி அலையறதுக்கு உனக்கு காசு கொட்டி கொடுக்கறேன்?” என்று இன்னமும் காதுகளுக்கு ஒவ்வாத வசைமொழிகளை வாய்க்கு வலியெடுக்கும் மட்டும் பேசினார் அந்த பெரிய மனிதர்! அவர் தாரகேஷின் அப்பா; சட்டமன்ற உறுப்பினர் சத்யநாதன்! அவரருகே பயம் பரவிய முகத்துடன் தாரகேஷின் தோழி கோகிலலக்ஷ்மி. “மன்னிக்கணும் தலைவரே! நாலு நாளா நல்ல மழை! அப்டியும் நாங்க அவனை வேவு பார்க்கறதை நிறுத்தல.” என்றவர், அருகிருந்த கோகிலாவைக் காட்டி சொன்னார். "அவன் இந்தப் பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்த வரை உங்களுக்கு ரிப்போர்ட் கொடுத்துட்டோம். இன்னிக்குதான் பசங்க மிஸ் பண்ணிட்டானுங்க. இப்போ வரை அவன் வீட்ட...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗 கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...