Skip to main content

Posts

Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 18

அத்தியாயம் 18 அழைத்துப் போக நான் வருவேன் என்று சொல்லியும், அம்ருதா அப்பாவுடன் புறப்பட்டு வந்துவிட்டதில் ஏற்கனவே எரிச்சலுடன்தான் வந்தான் ஹரிஷ். மருத்துவமனை வாயிலிலேயே அம்ருதாவைக் கண்டு மகிழுந்தை நிறுத்தியவன், தங்கையின் கண்களிலும் சிரிப்பிலும் புதிதாய் ஊடாடும் உணர்வினை அவதானித்தபடி அந்த சிரிப்பின் மூலத்தை நோக்கி விழியை நகர்த்தினான். அங்கே முதலில் அவன் கவனத்தைக் கவர்ந்தது பச்சை நிற மஹிந்திரா ஸ்கார்பியோ! மெலிதாய் உண்டான அதிர்வுடன் அவசரமாக ஸ்கார்பியோவின் எண்ணைப் பார்த்தான். பார்த்தவுடன் அது மூளைக்கு சென்று, உண்மை(?) உணரப்பட்டதும் மொத்த நரம்புகளிலும் கோப இரத்தம் தாறுமாறாக ஏறி இறங்கியது. என்ன செய்து வைத்திருக்கிறாள் அவன் தங்கை! விருட்டென கீழே இறங்கியவன், அங்கே வந்த ஊழியர் ஒருவரிடம் மகிழுந்தின் திறப்பைத் தந்துவிட்டு அடக்கப்பட்ட சீற்றத்துடன் அம்ருவை நெருங்கினான். ஹரிஷின் சீற்றம் மிகுந்த பார்வை தன் ஸ்கார்பியோவையும் தன்னையும் எரிப்பதை ஆழ்ந்து கவனித்த அஸ்வத்திற்கு, ஏற்கனவே அவனுக்கு தன்னைத் தெரிந்திருக்கிறது என்று புரிந்து போனது.  எனில்? இந்த டாக்டர் பெண் தன்னைப் பற்றி அவளின் அண்ணனிடம் சொல்லியி...

ஸ்கார்பியோ காதல் - 17

அத்தியாயம் 17 மூன்று நாட்கள் கடந்த பின்னர், அன்று ஹரிஷ் ஊர் திரும்ப இருந்தான். தானே தனியாக அண்ணனை வரவேற்க வேண்டும் என்று அப்பாவின் காலில் விழுந்து கெஞ்சி, சில பல நாடகத்தனங்களை அரங்கேற்றி, மகிழுந்தின் சாவியைக் கைப்பற்றியிருந்தாள் அம்ருதா. விடியா பொழுது என்பதால்தான் அவளிடம் மகிழுந்தைத் தர மறுத்தார் அம்ருவின் அப்பா நடராஜன். “வரும்போது காரை அவன்கிட்ட கொடுத்திடணும்.” என்ற நிபந்தனையுடன் தான் திறப்பு அவளிடம் தரப்பட்டது. இரவில் பாதி நேரம் அஸ்வத்தின் குழந்தையை நினைத்து தூக்கமில்லாமல் இருந்தவள், மீத நேரமும் எங்கே தூங்கிவிட போகிறோமோ என்று முகத்தைக் கழுவிவிட்டு அமர்ந்திருந்தாள். அதுவரை தூங்காமல் கவனத்துடன் மகிழுந்தைச் செலுத்தி வந்திருந்தவளால் அதற்கு மேல் முடியவில்லை.  இதோ! விமானநிலையத்தில் அண்ணனுக்காகக் காத்திருப்பு பகுதியில் அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டிருக்கிறாள். விமானம் தரையிறங்கியதாக அலறிய அறிவிப்பு சப்தம் கூட அம்ருவின் தூக்கத்தைக் கலைக்குமளவிற்கு பலம் பொருந்தியதாக இல்லை என்பதுதான் பரிதாபம்! விமான நிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு மனைவியுடன் காத்திருப்பு பகுதிக்கு வந்த ஹரிஷுக்கு, கண்மூடி ச...

சீதையின் பூக்காடு - 28

அத்தியாயம் 28 யதுநந்தன் பிறந்த போது கூட சீதாவின் நினைவில் அமைதியாக மகிழ்வைக் கொண்டாடிய விபுநந்தன், இப்போதுதான் எல்லையில்லா சந்தோஷப் புன்னகையை உதிர்க்கின்றான். மகனின் இம்மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். அதற்கு ஆரவியை அவன் கைபிடிக்க வேண்டுமென எண்ணிய ரகுநந்தன் தம்பதியர், முதற்கட்டமாக ஆரவியின் பெற்றோரை சந்திக்க முடிவு செய்தனர். அப்போது அங்கே துப்பறியும் நிறுவனத்தில் இருந்து வந்த பெண் தன்னை அனிதா என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.  இவர்கள் மொட்டைமாடியில் சீதாவின் நினைவில் துக்கத்தில் அமிழ்ந்திருக்கையில், கீழே ரகுநந்தனின் நண்பர் வெங்கட் இருந்தாரல்லவா? அவர்தான் அனிதாவைப் பற்றியும் அவள் வரவைக் குறித்தும், முழுதாக விசாரித்துவிட்டு அவளை மாடிக்கு அனுப்பியிருந்தார்.  சும்மா அனுப்பவில்லை. "நீ தேடி வந்த கல்பிரிட் பேரு விபுநந்தன்." என்று கூறி அனுப்பினார். அவளும் முன்னமே அவன் அலைபேசி எண்ணை வைத்து, அவன் ஜாதகத்தையே புரட்டியிருந்தாள். இவ்வீட்டின் உரிமையாளர் யாரெனவும் அவர் பிண்ணனி, குடும்ப விவரங்களையும் சேகரித்து தெரிந்து கொண்டிருந்தாள். அவ்வண்ணமே தட்சிணாவின் விபத்தைப் பற்றியும் அறிந்திருந்தாள். எனவேதா...

சீதையின் பூக்காடு - 27

அத்தியாயம் 27 தன்னைத் தூக்கி வளர்த்த அங்கிள் வெங்கட்டின் கண்டிப்பு, தன் தாயின் முறைப்பு, அவரிடம் நந்தாவின் கெஞ்சல், அப்பாவின் கிண்டல், தன் தோழன் ரிஷிண்ணாவின் கேலி, தோழி டியானின் கொஞ்சும் தமிழ், தான்யாவின் சிரிப்பலை, குட்டி யதுவின் அழகு பாவனைகள் என்று நடக்கும் கூத்து அனைத்தையும் தாயின் அருகில் அமர்ந்து கண்கள் பனிக்க கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள் சீதா.  காலையில் ஆரவியை சேலை கட்ட வற்புறுத்திவிட்டு, அவள் அணிந்ததும் ரசித்துப் பார்த்தவள் பின், 'தன் பூக்களிடம் ஒரு ஹாய் சொல்லி விட்டு வருகிறேன்' என்று சொல்லி சென்றாள். மாடியில் பூக்காட்டை சுற்றி வருகையில், சாலையில் சற்று தொலைவில் தங்கள் வீட்டு கார்கள் வருவதைப் பார்த்துவிட்டு கீழே வந்திருந்தாள். நல்லவேளை நந்தா அம்மாவிடம் ஓர் அறையோடு தப்பித்துவிட்டான் என்று நினைத்தவள், தான்யாவின் தாய்மை தோற்றத்தில் நெஞ்சம் நிறைந்திருந்தாள். தான்யா இங்கு திருமணத்திற்கு முன்பு வந்ததுதான். அதன் பின் இப்பொழுதுதான் அவளைப் பார்க்கிறாள் சீதா. டியானும் தன் மருமகன் யதுநந்தனும் வார இறுதிகளில் இங்கு வரும் போது தூரமாக நின்று பார்த்துவிட்டு போய்விடுவாள். இன்று தான் தன...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.