அத்தியாயம் 27 அன்றிரவு அம்ருதா அப்பாவுடன் வீட்டிற்கு வந்தபோது ஹரிஷ், ஸ்வேதாவுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் இன்று மருத்துவமனையில் விடுப்பு சொல்லியிருந்ததால் அவனோடு பேசும் ஆவலை அடக்கிக்கொண்டு தன்னறைக்குச் சென்றாள். நேற்று மாலையில் கோவிலிலிருந்து அஸ்வத்தை அழைத்துச் சென்றவனை இப்போதுதான் பார்க்கிறாள். காலையில் அழைத்தபோது தானே மீண்டும் அழைப்பதாகச் சொல்லி வைத்தவன், பின்னர் அழைக்கவே இல்லை. அதனால் அவனிடம் தனியே பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஹரிஷுக்கு இன்றைய நாளெல்லாம் அலைச்சல். காவல்நிலையத்தில் தேவா பேசியதே ஏகத்துக்கும் எரிச்சலைக் கிளப்பியிருந்தது. அனைவரும் அஸ்வத்திற்கே சாதகமாக பேசுவதில் கோபம் கொதிநிலையை அடைந்திருக்க, முழுநாளும் விடுப்பு எடுத்துக்கொண்டு கண்ணெதிரே தெரிந்த ஒரு திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டான். டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இருக்கையை ஆக்ரமித்தவனின் தலைக்குள் இனி தங்கை கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்ற சிந்தனை! தேவாவிடம் கோபமாகப் பேசியதைப் போல் தங்கையிடம் பேசிவிட முடியாது. நீ அஸ்வத்தின் மேல் வன்மத்துடன் பேசுகிறாய் என்று சண்டை போடுவாள்....
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗 கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...