Posts

Tamil fiction novels | Short stories

🌻முழு நாவல்கள், தொடர்கதைகள் மற்றும் சிறுகதைகள் 🌻

Image
ShriVijay Writings - TOC இதுவரை நான் எழுதிய நாவல்களும் சிறுகதைகளும், அவற்றுக்கான இணைப்புகளும்! தொடர்கதைகள்   ஸ்கார்பியோ காதல்🚗💌   கிண்டில் புத்தகங்கள் 📖 1.  காதல் அரண்💝  (#policehero | #love) 2.  அன்பும் அறனும் உடைத்தாயின் 🔮  🤍 (#love | #fantasy) 3.  திருடனின் தூரிகை💙💜   (#friendship | #love | #entertainment) 4.  ஆஷிக்கிற்கு வந்த சோதனை🤜🤛   (#suspense |  #comedy) 5.  சீதையின் பூக்காடு💗🌟   (#love | #thriller | #ghost) 6.  ஆயர்பாடியில் கண்ணனில்லையோ💞   (#loveandlove) 7.  ஏகாந்தத் தூறல்கள்💫💚   (#aftermarriagelove | #feelgood |   #villagefamily) 8.  கருவறை கீதம்❤️ - பாகம் 1.     கருவறை கீதம்❤️ - பாகம் 2.   (#motherlove | #emotional | #romance) 9.  வல்லின வஞ்சியிவள் 💟   (#love | #sciencefiction) 10.  நட்பினிலே💖                             (#funny | #love | #nologic) 11. ...

சீதையின் பூக்காடு - 15

Image
அத்தியாயம் 15 இதுவரை வகுப்பில் ஏதேனும் பிரச்சினை என்றால் பேராசியர்களிடம் பேச தயங்கும் மாணவர்கள் சீதாவிடம் தான் சொல்வார்கள். இவள் மனதிற்கு சரியாகப்பட்டால் உடனடியாக பேசி பிரச்சனையை சுமூகமாக்கிவிடுவாள். இது இரண்டாம் ஆண்டாக இருந்தாலும் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் ராகிங்'ன் போதே சண்டையின் மூலம் சீதாவின் புகழ் கல்லூரியில் ஆங்காங்கே பரவியிருந்தது. எனவே இப்போதும் கஷ்டம் தீருமோ அல்லவோ சீதாவிடம் தன் சொந்த பிரச்சனையைக் கூறியதால் பாதி பாரம் தீர்ந்தாற் போல் உணர்ந்தாள் சாரதா.  இரண்டாம் ஆண்டின் இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முடிவுகள் வர ஒரு மாத காலமேனும் ஆகும் என்பதால் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். முடிவெடுத்ததைப் போலவே, அந்த வார இறுதியிலேயே சாரதாவுடன் அவளின் கிராமத்திற்கு சென்ற சீதா, ஊர்க்காரர்களை விசாரித்துவிட்டு பயனில்லை என்றதும், சாரதாவையும் அழைத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரங்களில் தோல் தொழிற்சாலை எங்குள்ளது என்று அலசலானாள். சீதாவின் இணையதளத் தேடலிலும் அவளின் தந்தை ரகுநந்தன் தந்த தகவலின் அடிப்படையிலும் சாரதாவின் கிராமத்திற்கு அருகில் எந்த தோல் தொழிற்சாலையும் இல்லை எனத...

ஸ்கார்பியோ காதல் - 12.2

Image
அத்தியாயம் 12.2 அஸ்வத்திற்கு அம்ருவின் கோபம் புதிதாக தெரிந்ததுவோ? ஆச்சரியம் போல் லேசாக புருவம் உயர்த்தி சிரித்தான். “அது செல்லப் பேருன்ற கான்ஷியஸே எனக்கில்ல டாக்டர். பழக்கத்துல சொல்லிட்டேன். ஸாரி…” இதழ் அழுத்தி கன்னக்குழியுடன் முறைப்பாகப் பார்த்தவள், “அந்த லொகேஷனுக்கு நீங்க போனீங்களா? கோவளத்துல எந்த ஏரியா?” எனக் கேட்க, அஸ்வத்தின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தது. அம்ருவின் முகம் பார்க்காமல் சொன்னான். “ம்ம் போனேன். பட் அது அவனோட சொந்த ஃபார்ம் ஹவுஸ் இல்ல. ரேவ்ஸ்… ஸாரி அவளோட இருக்க மட்டும் அந்த வீட்டை யூஸ் பண்ணிருக்கான்.” அதற்குமேல் அந்த பேச்சினைத் தொடர அசூயைக் கொண்டவள், புலனச் செய்திகளில் கடைசியாக இருந்த உரையாடல்களை வாசித்தாள். ‘Ma’am, baby ku edhuvum ahadhunu sonninga… But Innaiku ava school la mayangi vizhundhutalam.’ ‘Rev, oru medicine edutha side effects vara dhana seiyum?’ ‘Ma’am, bayama irukudhu😥’ ‘Nothing to worry, Rev!’ ‘Yes, bayapadadha ma… Nee baby a nalla observe panni avaloda health condition a engaluku update pannu and whatever happens don't stop our syrup!’ ‘Ok Sir.’ ‘...

ஸ்கார்பியோ காதல் - 12.1

Image
Amru at Aswath's home அத்தியாயம் 12.1 அஸ்வத் வீடிருக்கும் பகுதி தாம்பரத்தில் உள்ளடங்கி இருந்தது. பணக்காரர்கள் வசிக்கும் விசாலமான தெரு. தெருவின் முடிவில் சற்று தள்ளி புதிதாய் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கால்கள் ஊன்றி எழும்பிக் கொண்டிருந்தன.  அம்ருதா எந்த தைரியத்தில் அவன் வீட்டிற்கு வந்தாள் என்று தெரியாது. அதிலும் அவளின் மகிழுந்தை எடுத்து வந்திருக்கவில்லை. அவள் தெருவுக்குள் நுழைந்ததும் வீட்டினைத் தேட தேவையற்று அஸ்வத் வெளிவாசலில் வந்து நின்றிருந்தான். ஊபர் வாகனத்தில் வந்து இறங்கியவளைக் கண்டவன், அவளுக்கு பின்னேயே வந்த இரு சக்கர வாகனம் சிறிது தொலைவில் நின்றுவிட்டதையும், அந்த ஹெல்மெட் தலை இவர்கள் பக்கம் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டதையும் கவனித்தான். ஏனோ சந்தேகம் தோன்றிவிட, கூர்ந்து பார்த்து அவ்வாகனத்தின் எண்ணை மனிதில் குறித்து வைக்க, அம்ருதா அலைபேசியில் கட்டணத்தைச் செலுத்தித் கொண்டிருந்தாள். “வாங்க டாக்டர். உங்க கார் என்னாச்சு?” அவனோடு உள்ளே நடந்தபடி சொன்னாள்.  “சொன்னா சிரிப்பீங்க. மை‌ பேரண்ட்ஸ் வோண்ட் லெட் மீ டிரைவ் தி கார்! இப்போ அண்ணா ஊர்ல இல்லைன்னு தான் ஹாஸ்பிடலுக்கு மட்ட...

சீதையின் பூக்காடு - 14

Image
அத்தியாயம் 14 'விபுநந்தன் காதலென்று கூறி கழுத்தறுத்துவிட்டான்; தானும் மடத்தனமாக அவனிடம் பிரியத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று ஆரவி ஒரு மூச்சு குமுறினாள். காதலின் அடிப்படையே உண்மையும் நம்பிக்கையுமல்லவா? இங்கே தன்னிடம் உண்மையாக இல்லாதவனை, தான் எங்ஙனம் நம்புவது? என்று குழம்பி தவித்தாள். இதற்கிடையே சீதாவைப் பார்க்க, 'பவித்ரமான மலரைப் போல் இருப்பவளுக்கு எப்படி இந்நிலை வந்திருக்கக்கூடும்? அவள் தன்னிடம் பேச விழைந்த காரணமென்ன?' என்று அது வேறு மூளையின் ஒரு புறம் ஓடிக் கொண்டிருந்தது. சற்றுநேரம் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சையெடுத்து, தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டு விழிகளைத் திறந்து சீதாவைப் பார்த்தாள். அவள் அதே புன்னகை மாறாத முகத்தோடு கேட்டாள். "டூ யூ ஃபீல் பெட்டர் நௌ, ஆரவி?"  "நீங்க என்னான்ட ஏதோ பேச வந்த மாதிரி இருந்ததே?"  சின்னதாக சிரித்துக்கொண்டு, "இல்ல... இந்த ஏழு வருஷத்துல முதல்முதலா ஒரு பொண்ணு கண்ணுக்கு நான் தெரிஞ்சிருக்கேன். அதான் சும்மா உன்கிட்ட பேச ஆசை வந்துடுச்சு." என்றாள். 'ஏழு வருஷமா? அப்ப…' ஆரவியால் வாய்விட்டு கேட்க முடியவ...

சீதையின் பூக்காடு - 13.2

Image
அத்தியாயம் 13.2 சீதா தொடர்ந்தாள். "அதான் அவன் தில்வாலே துல்ஹனியா படம்னு சொன்னதும் உனக்கு என் குரல் கேட்கும்ங்கற ஞாபகம் கூட இல்லாம எப்பவும் போல கண்ணை மூடி பாடித் தொலைச்சிட்டேன். அப்புறம் தான் நீ மயங்கினதும் என்னையே திட்டிட்டு, இனி நீங்க பேசும் போது அங்கே இருக்கவே கூடாதுனு முடிவு பண்ணி வந்துட்டேன். ஆனா, அதுக்கப்புறம் திடீர்னு நந்தா பயந்து கத்துற சத்தம் கேட்டு தான் என்னவோ ஏதோனு நினைச்சு மறுபடியும் கீழ வந்தேன்." அவன் அன்னாபெல் என்ற பேய் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஆரவியின் அழைப்பிற்கு கத்தினானல்லவா? அதைச் சொல்கிறாள். "ம்ம்... அதான் அன்னிக்கு நாங்க சாப்பிடும் போது சிரிக்க ஆரம்பிச்சு பாதிலயே நிறுத்திட்டேளா?" "ஆமா ஆரவி! நீங்க இப்டி இயல்பா இருக்கறதை வச்சு தான் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா இருப்பீங்கன்றதுல எனக்கு சந்தேகம் வரல. அதோட நீங்க லவர்ஸ் மாதிரியும் நடந்துக்கலயே." என்று சிரித்தவள், "நந்தா லவ்லாம் பண்ணுவான்னு நான் நினைக்கல. எத்தனை பெரிசா வளர்ந்தாலும் அம்மாவுக்கு பிள்ளை குழந்தை தான் இல்ல? நந்தாவும் எனக்கு அப்டி தான் ஆரவி." என்று பாசத்தில் ம...

சீதையின் பூக்காடு - 13.1

Image
அத்தியாயம் 13.1 விபுநந்தனிடம் காதல் சொல்லிவிட்டு வந்த ஆரவி, தனதறைக்கு அடுத்த அறைக்கதவு காற்றில் ஆடியதைக் கண்டு உள்ளே சென்று பார்வையிட எண்ணினாள். இங்கு எந்த அறைகளும் பூட்டப்படாமல் தான் இருந்ததென்றாலும், இன்று சற்று விலகி திறந்திருந்தாற் போல் இருந்தது.  உள்ளே அந்த அரூபப் பெண் அமர்ந்திருக்க, முதலில் பயந்த ஆரவி பின் அவள் யாரென கோபமாக வினவ, அவள் அங்கிருந்த அலமாரியில் உள்ள புகைப்படத் தொகுப்பைக் காண செய்தாள். ஓர் தொகுப்பில் இருந்த முதல் நான்கு புகைப்படங்களைப் பார்த்ததுமே ஆரவிக்கு எதுவோ புரிவதைப் போல் இருந்தது.  புகைப்படங்களில் இந்த பெண்ணோடு, இன்னும் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் படகு சவாரி செய்பவர்களைப் போல லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தனர். அந்த இரண்டு பெண்களில் ஒருவர் இவர்கள் அன்னையாக இருக்க வேண்டும். அளவான புன்னகையோடு நிமிர்வாய் நின்றிருந்தார். மற்றவள் இவளுடைய சகோதரியாக இருக்கலாம். ஆடவர்களில் ஒருவன் நம் ஆரவியின் மனதை மயக்கிய திருடன், விபுநந்தன்! இன்னொருவர் இவர்கள் தந்தையாக இருக்கக்கூடும். ஆனால் தோழனைப் போல் தம் மக்களோடு உல்லாசமாய் சிரித்துக் கொண்டிருந்தார். மற்றொருவன் விபுநந்த...