அத்தியாயம் 23 நேற்றைக்கு முந்தைய நாள்! ஹரிஷ் அவன் வீட்டிலிருந்து அதிக தொலைவிலிருந்த ஜிம் ஒன்றின் வெளியே தனது மகிழ்வுந்தில் அமர்ந்திருந்தான். அருகே இருபத்தாறு வயதில் வாட்டசாட்டமான உடலமைப்புடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவன்! இப்போதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று, முகம் கழுவியதில் காயாமல் ஆங்காங்கே ஒட்டியிருந்த நீர்த்துளிகளில் தெரிந்தது. ஜன்னலில் தன் பரந்த முதுகைச் சாய்த்து முழங்கையை இருக்கைப் பகுதியில் பதித்திருந்தவன் சொன்னான். “இந்த ரோலர் பொட்டட்டோக்காகவே செஞ்சு வந்த பிரச்சினை மாதிரி இருக்குது.” அம்ருவை, ‘ரோலர் பொட்டட்டோ’ என்ற அடைமொழியுடன் பேசும் இவனை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அவளிடம், ‘கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டு வம்பிழுக்கும் அவளின் அத்தை மகன் தேவா. அஸ்வத் பார்த்த இரு முறையும் இவன் அங்ஙனமே பேசி வைத்ததில் அது உண்மையென்று நினைத்து, இவனைத்தான் அம்ருதா திருமணம் செய்ய போகிறாள் என்று நம்பிக் கொண்டிருக்கிறான் அஸ்வத். அம்ருதா அண்ணனிடம் அஸ்வத்தைப் பற்றிய அனைத்து விடயங்களையும் தெரிவித்த பின்னர்...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗 கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...