அத்தியாயம் 25 காலையில் அஸ்வத் வீட்டிற்கு தேவா வந்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, தான்தான் செய்தேன் என்று அஸ்வத் வாக்குமூலம் அளித்திட, ஹரிஷ் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் தேவாவிடம் நிதானமாக, “நோ இன்ஸ்பெக்டர்!” என்று திடமாகச் சொன்னவன், “ம்ம்… நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?” என்றிட, “என்ன பேசப் போறீங்க, மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்?” எனக் கேட்டான் அஸ்வத். ‘அடங்குறானா பாரு!’ “ரிலேட்டிவ்ஸ் உங்க பர்சனல் பேசறதா இருந்தா தாராளமா பேசுங்க. ஆனா என்னைப் பத்தின விஷயமா இருந்தா என் முன்னாடியே பேசலாம்.” இந்த இடைப்பட்ட நேரத்தில், அஸ்வத்தைத் தான் முன்பே ஒருமுறை அம்ருதாவுடன் அவள் வீட்டினருகே இருக்கும் தேநீர் கடையில் வைத்து பார்த்திருக்கிறோம் என்று நினைவுபடுத்திக் கொண்டிருந்தான் தேவா. அன்று அம்ருவிற்கு ஒரு கையசைப்பை மட்டும் தந்துவிட்டு விடைபெறும் நோக்கில் இருந்தவன் அஸ்வத்தை ஊன்றி கவனிக்கவில்லை. அதை எண்ணமிட்டபடியே ஹரிஷிடம் கேட்டான். “சொல்லுங்கத்தான், என்ன விஷயம்?” ஹரிஷ் அஸ்வத்தின் மேல் பார்வை வைத்துச் சொன்னான். “தன்வீர் விஷயத்துல இவர் எதுவும் செஞ்சிருக்க முடியாது. அப்டியே செஞ்சிருந்தாலும் அது இவர் ...
கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗 கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...