Skip to main content

Posts

Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 30.2

அத்தியாயம் 30.2 அவன் சிந்தனையில் சுழன்ற எண்ணத்தின் சாராம்சம் இதுதான்! முதலில் இங்கு வந்து மாட்டிக் கொண்ட பின், அவள் கதையோடு தங்களை சம்பந்தப்படுத்திக் கொண்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்த ஆரவி, இவன் சீதாவின் கடந்த காலத்தை… அதுவும் இவள் கதையில் அக்காவை எழுதியுள்ளாள் என்று சொன்ன பிறகு, அவள் இங்கு இருப்பது போல் தனக்குத் தானே உருவகப்படுத்திக் கொண்டாளோ? கடைசி நாள் பகல் முழுவதும் இவள் சீதாவின் அறையை விட்டு வரவே இல்லையே? அன்று சாப்பிடுவதற்காக எத்தனை முறை வந்து அழைத்தான்?  இன்னும் சொல்லப் போனால் முதலில் இவளிருந்த தான்யாவின் அறையில் தான் இவளுக்கு விருப்பமான நாவல் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை தொட்டுக் கூட பாராதவள் சீதாவின் அறையே கதி என்று கிடந்தாள். இப்பொழுதும் இதோ இங்கே வந்து என்னவோ பசலை நோய் கண்டவளைப் போல் படம் காட்டிக் கொண்டிருக்கிறாள்? இவ்வாறாக இவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் விறுவிறுவென கீழே வந்து நிலவறைக்குள் சென்ற ஆரவி, அங்கிருந்த சீதாவின் மருத்துவப் படிப்பு சம்பந்தமான புத்தகங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டாள். ஏனென்று கேட்ட விபுவிடம், தன் கதையில் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தை...

சீதையின் பூக்காடு - 30.1

அத்தியாயம் 30.1 இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. வித்யாலட்சுமி மகனின் திருமணம் குறித்து ஆரவி வீட்டில் பேசலாம் எனக் கூற, ரகுநந்தன் இப்போது வேண்டாமென மறுத்துவிட்டார். அன்று பரமானந்தன் மகளைப் பார்த்ததும் பரிதவித்து வந்ததும், மகளைப் பாதுகாத்துள்ளோம் என்றெண்ணி மீண்டும் மீண்டும் தங்களுக்கு நன்றி கூறி சங்கடத்தில் ஆழ்த்தியதும், அவரின் மனதிற்கு அத்தனை ஏற்புடையதாயில்லை.  விபுநந்தனிற்கு இன்னும் பொறுப்பும் பக்குவமும் போதவில்லை என்று நினைத்தார். அதோடு இப்போதுதான் அவனுக்கு இருபத்தைந்து வயதாகிறது. எனவே ரிஷி எப்படி ஒரு வெளிநாட்டில் தங்கள் கிளையைத் தோற்றுவித்து இன்று வரை அதைத் திறம்பட நிர்வகிக்கின்றானோ, அதே போல் விபுவையும் ஏதேனும் வெளிநாட்டிற்கு பார்சல் செய்யத் தீர்மானித்திருந்தார்.  அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருந்தது ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய தீவான ஹொக்கைடோவை! அங்கிருந்தே தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம். இந்த வயதிலேயே தொழிலில் ரிஷியை விட விபு திறமையானவன் என்பது ஒரு முதலாளியாக ரகுநந்தனிற்கு புரிந்திருந்தாலும், ரிஷியைப் போல் விபு பக்குவப்பட்டவனல்ல என்று ஒரு தந்தையாக புரிந்து வைத்தி...

ஸ்கார்பியோ காதல் - 20

Aswath vs Harish 💥 அத்தியாயம் 20 அம்ருதா தன்னிடம் ஒப்படைத்துவிட்டு போன அஸ்வத்தை நிதானமாக ஏறிட்டான் ஹரிஷ். அதேநேரம் அவனும் இவனைப் பார்க்க, அப்போது அவன் விழிகளில் சற்றுமுன் தென்பட்டதைப் போல் மன எழுச்சிக்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. சற்றுமுன் தென்பட்டதா? ஆமாம்!  ஒரு மனநல மருத்துவராக ஹரிஷ் அவனை ஆரம்பம் முதல் அளவிட்டுக் கொண்டுதான் இருந்தான். இன்று காலையில் முதல்முறையாக அம்ருவுடன் அஸ்வத்தை நேரில் பார்த்தபோது, இவனுக்கு கோபம் வந்தது சரி! ஆனால் அவனும் ஏன் கண்கள் வழி நெருப்பைக் கக்கினான்? அதிலும் ஒரு நிமிடத்திற்கு முன்பு அம்ருவிடம் சிரித்தவன், அடுத்த நிமிடம் அவளைப் பார்வையால் பஸ்பமாக்கினான். அப்போதைய ஆங்காரத்தில் ஹரிஷால் இதனை யோசிக்க முடியவில்லை. மனம் சற்று சாந்தமான பிறகு, அவர்கள் இருவரும் சிரித்து நின்ற காட்சியை மீட்டிப் பார்த்தவனுக்கு இந்த விநோதம் துல்லியமாகத் தெரிந்தது. இப்போதும் தங்கை அவளாகவே அவனைத் தேடிச் செல்லவில்லை. வேறு ஏதோவொரு காரணம் என்று தெரிந்த பிறகும், காதல் என்ற வார்த்தையில் அஸ்வத் இவனைக் குழப்பமாய்ப் பார்த்ததிலும் ஹரிஷின் மனநிலை சமன்பட்டிருந்தது. அதில் சற்றுமுன் அம்ரு...

ஸ்கார்பியோ காதல் - 19

அத்தியாயம் 19 உணவு இடைவேளையில் பேசலாம் என்ற தங்கை அந்த நேரத்தில் அழைத்து பத்து நிமிடங்களில் வந்துவிடுகிறேனென சொல்ல, கடுப்பாகிப் போனான் ஹரிஷ். செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவனால் உடனே வரவும் முடியவில்லை. தங்கை தன்னிடம் மர்மமாக நடந்துகொள்வதில் ஏற்கனவே அதிருப்தியில் இருந்தவன், அவளின் தற்போதைய நடவடிக்கையில் மிகுந்த கோபம் கொண்டான். பத்து நிமிடத்தில் பக்கத்தில்தான் எங்கேனும் சென்றிருக்கக்கூடும் என்று கணித்து வேலை முடிந்ததும் அவளுக்கு அழைக்க, அவள் அழைப்பை ஏற்கவில்லை. வேலையின் நடுவே தொந்தரவாக இருக்கக் கூடாதென அவள் அலைபேசியை நிசப்தத்தில் வைத்துவிடுவது வழமை தான்! இருப்பினும் வெளியே சென்றிருக்கும்போதும் தன் அழைப்பை ஏற்காதது நெருடலைத் தரவே, வெளியில் வந்தவன் வாயில் காப்பாளரிடம் கேட்டான். அவர் அம்ருதா வெளியே வரவேயில்லை என்றார். சில நிமிடங்கள் குழம்பியவன் முன்பக்கம் வரவில்லையென்றால் ஒருவேளை பின்பக்கம் வழியே சென்றிருக்கலாமே என்று அங்கே ஓடினான். அம்ருதாவிற்கு அழைத்துக்கொண்டே ஊசி போடும் அறை, நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுகள், மாதிரி சேகரிப்பு அறை, மருத்துவ ஆய்வகப் பிரிவு, பராமரிப்பு அற...

சீதையின் பூக்காடு - 29

அத்தியாயம் 29 செவ்வாய் கிழமை காலை, அனிதா தன் தேடுதலின் முதல்கட்டமாக புத்தகப் பதிப்பகத்தாரின் அலுவலகத்தில் விசாரிக்க, அவர்கள் பரமானந்தத்திடம் சொன்னதையே இவளிடமும் கூறினர்.  அந்த அலுவலகம் ஒரு ஒடுங்கிய தெருவில் இருந்தாலும், தெருவின் ஆரம்பத்தில் இருந்ததால் அருகில் தேநீர் கடை, ஆட்டோ நிறுத்தம், சாலையோர கடைகள் என்று அந்த இடமே திருவிழா கொண்டதைப் போல் ஜேஜே என்றிருந்தது. முதலில் தேநீர் கடையில் ஆரவியின் புகைப்படத்தைக் காட்டி, அவளின் இரு சக்கர வாகனத்தையும் அடையாளமாகக் கூறி விசாரித்தாள். எப்போதேனும் வந்து போகும் ஆரவியை அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.  ஆட்டோ நிறுத்தத்திலும் அவ்வாறே பதில் கிடைத்தது. சற்றுநேரம் யோசித்துவிட்டு, சாலையோர கடைகளில் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு களைத்தாள். ஆரவி காணாமல் போன அன்று மாலையும், மறுநாளும் மழையின் காரணமாக யாரும் கடை போட்டிருக்கவில்லை. எனவே யாருக்கும் எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை.  நம்பிக்கையை விடாமல் மீண்டும் சில கடைகளில் விசாரித்தாள். அதிர்ஷ்டவசமாக ஒரு கடை நபரின் மகன், அனிதாவின் சிக்கலான நூல்கண்டின் முனையைப் பிரித்துக் கொடுத்தான். அது என்னவெ...

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

ஸ்கார்பியோ காதல்🚗💌 - 9

  அத்தியாயம் 9 ‘வந்தோமா சொல்ல வேண்டியதைச் சுருக்கமா சொல்லிட்டு போட்டு தள்ளினோமான்னு இல்லாம, அவகிட்ட ஏன் உன்னோட மொத்த கதையையும் சொல்லிட்டு இருக்க? இத்தனை நாள் நிராதரவா நின்னுட்டு இப்போ ஆள் கிடைச்சதுன்னு ஆறுதல் தேடறியா அஸ்வத்?’ தன்னுள்ளே தோன்றிய கேள்விக்கு, ‘நோ! சின்னப் பொண்ணு! ஈஸியா ஏமாத்தலாம். அவ சர்க்கிள்ல இருந்து நமக்கு தேவையான யூஸ்ஃபுல் இன்ஃபோ ஏதாவது தேறுதான்னு பார்க்கலாம். அதுக்கு அவளுக்கு என் மேல நம்பிக்கை வரணும். ஸோ இந்த ஃப்ரெண்ட்லி அப்ரோச் தான் பெட்டர்! மோர்ஓவர் அவகிட்ட என் விஷயம் சொல்றதால ஒரு கான்ஸூம் (பாதகம்) இல்ல.’ என்று குரூரமாக பதிலளித்தான் அஸ்வத். அத்துடன் என்ன இருந்தாலும் அன்று இறப்பை நாடியவனைத் திசை திருப்பியவள் என்ற நன்றியுணர்வும் அம்ருதா மேல் இருந்தது.  ஆனால் இத்தனை வருடங்கள் உள்ளே அமிழ்த்தி வைத்திருந்த, தன் முன்னாள் மனைவி ரேவதி பற்றி அம்ருவிடம் பாதி பகிர்ந்ததிலேயே, அஸ்வத் மனதில் ஓர் அமைதி வியாபித்திருப்பதை அவன் உணரவில்லை.  எந்தளவிற்கு அமைதி?  இதுவரை இல்லாத அளவில் நிதானமாக, மிக நிதானமாக ஒரு கொலையை - அதாவது அம்ருவைக் கொல்வதற்கு எந்த மாதிரியாகத் த...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.