Posts

Tamil fiction novels | Short stories

🌻முழு நாவல்கள், தொடர்கதைகள் மற்றும் சிறுகதைகள் 🌻

Image
ShriVijay Writings - TOC இதுவரை நான் எழுதிய நாவல்களும் சிறுகதைகளும், அவற்றுக்கான இணைப்புகளும்! தொடர்கதைகள்   ஸ்கார்பியோ காதல்🚗💌   கிண்டில் புத்தகங்கள் 📖 1.  காதல் அரண்💝  (#policehero | #love) 2.  அன்பும் அறனும் உடைத்தாயின் 🔮  🤍 (#love | #fantasy) 3.  திருடனின் தூரிகை💙💜   (#friendship | #love | #entertainment) 4.  ஆஷிக்கிற்கு வந்த சோதனை🤜🤛   (#suspense |  #comedy) 5.  சீதையின் பூக்காடு💗🌟   (#love | #thriller | #ghost) 6.  ஆயர்பாடியில் கண்ணனில்லையோ💞   (#loveandlove) 7.  ஏகாந்தத் தூறல்கள்💫💚   (#aftermarriagelove | #feelgood |   #villagefamily) 8.  கருவறை கீதம்❤️ - பாகம் 1.     கருவறை கீதம்❤️ - பாகம் 2.   (#motherlove | #emotional | #romance) 9.  வல்லின வஞ்சியிவள் 💟   (#love | #sciencefiction) 10.  நட்பினிலே💖                             (#funny | #love | #nologic) 11. ...

ஸ்கார்பியோ காதல் - 14.2

Image
அத்தியாயம் 14.2 “அம்முவுக்கு ஏதாவது ஆச்சு… உன்னை சில்லு சில்லா நொறுக்கிடுவேன்டீ!” என்று எச்சரித்தவனின் குரல் நடுங்கியதை,  உல்லாசமாக பார்த்துச் சிரித்தாள் ரேவதி. “அப்போ மரியாதையா வழியை விட்டு தள்ளி நில்லு!” “நீ அம்முவை என்கிட்ட கொடு!” “நீ உன் கார்ல ஏறு! இவளைக் கீழே விட்டுட்டு நான் என் வழியைப் பார்த்துட்டு போறேன்.” என்றவள் குழந்தையின் பள்ளிப் பையைத் தூக்கி அஸ்வத்தின் முன் எறிந்தாள். “நீ முதல்ல அந்த சிரிஞ்சைக் கீழே போடு!” “எதுக்கு? என்னை அப்டியே காரோட சமாதி ஆக்கவா? போய் உன் கார்ல ஏறு!” அவளை ஆழ்ந்து பார்த்தவாறு பின்னால் நகர்ந்த அஸ்வத் தன் மகிழுந்தினருகே வந்திருக்க, அவனின் அமைதியைச் சந்தேகமாகப் பார்த்தவள், “திரும்ப என்னை ஃபாலோ பண்ண மாட்டன்னு என்ன நிச்சயம்?” என்றபடி இமைக்கும் நொடிக்குள் ஊசியைக் குழந்தையின் உடலில் செலுத்தியிருந்தாள். “****!” ஓர் மோசமான வார்த்தையை உதிர்த்தபடி அஸ்வத் பாய்ந்து வர, அதற்குள் குழந்தையைத் தூக்கி கீழே எறிந்தவள் சடுதியில் ஓட்டுநர் இருக்கைக்கு தாவி மகிழுந்தை உயிர்ப்பித்துத் திருப்பினாள். அஸ்வத் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்துவிட, அங்கே மயங்கிக் கிடந்தவனின் கழுத...

ஸ்கார்பியோ காதல் - 14.1

Image
அத்தியாயம் 14.1 அஸ்வத் அடுத்து என்ன சொல்ல போகிறானென்று உள்ளூர பிறந்த ஆர்வத்துடன் அம்ருதா அவன் முகத்தையே பார்த்திருக்க, அவன் சொன்னான். “போலீஸ்க்கு போய் விலாவாரியா சொல்லி கம்ப்ளெய்ண்ட் பண்ண டைம் இல்ல. ஸோ அவ விட்டுட்டு போயிருந்த… ஐ மீன் அவளோட பழைய மொபைலைக் கொஞ்சம் நோண்டினேன். டெலிடட் மெசேஜஸ், நம்பர்ஸ் எல்லாத்தையும் க்ளௌட் பேக்கப் மூலமா ரெகவர் செஞ்சேன். நான் ஹெல்ப் கேட்டிருந்த டிடெக்டிவ் ஆளும் வந்துட்டான். அவன்தான் அதுல இருந்து நாலஞ்சு நம்பர்ஸ் எடுத்தான். அப்புறம் போர்ட்டபிள் டிராக்கிங் டிவைஸ் வச்சு அந்த நம்பர்ஸோட சிக்னல் ஃபாலோ பண்ணினான். சிக்னல் ஹேண்ட்ஓவர் லாக்ல ஒரு நம்பர் மட்டும் சென்னை தாண்டி பெங்களூர் திசைப்பக்கம் மூவ் ஆகிட்டு இருந்தது. நல்லவேளை அவனுக்கு ஆபரேட்டர்ல தெரிஞ்சவர் இருந்ததுனால அவர் மூலமா டவர்-லாக் க்ராஸ் செக் பண்ணி கன்ஃபர்ம்’ன்னு சொல்லவும் உடனே கிளம்பிட்டேன். அப்டித்தான் அவளை ஃபாலோ பண்ணி போனேன்.” கண்மூடிக் கொண்டான் அஸ்வத். அன்று நடந்ததெல்லாம் விழித்திரைக்குள் காட்சியாக விரிந்தது. “ரோட் வழியா தான் போறாங்க. சோ வெகிகிள் கார், பஸ், வேன்னு எதுவாகவும் இருக்கலாம். ஆனா ரொம்ப தூரம் ப...

சீதையின் பூக்காடு - 20

Image
அத்தியாயம் 20 சீதாவிற்கு குழந்தை நலப் பிரிவில் மூன்று மாத காலம் பயிற்சி முடிந்து, அடுத்த மாதம் எமர்ஜென்சி பிரிவில் போட்டிருந்தனர். அதுவும் இரண்டு மாதங்கள் முடிந்த பின் இம்மாதம் விஷமுறிவுப் பிரிவில் பயிற்சி! இப்பிரிவில், தெரியாமல் ஒவ்வாத பொருட்களை உட்கொண்டவர்கள் அல்லது தெரிந்தே விஷப் பொருட்களை எடுத்து தற்கொலைக்கு முயன்றவர்கள் என வருபவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படும். சீதா பயிற்சியில் இருந்த காலத்தில் நான்கைந்து தற்கொலை முயற்சி கேஸ்களைப் பார்த்துவிட்டாள். இதில் கடைசியாக வந்த கேஸ், குழந்தை நலப் பிரிவில் இருக்கும் போது குழந்தைக்கு மூச்சு திணறல் என்று வந்த பெண்! அவள் கடுமையான விஷமருந்து எடுத்திருக்கிறாளென அக்கம்பக்கத்தினர் தூக்கி வந்திருந்தனர். அவளைக் காப்பாற்றிய பின்னும் கூட மீண்டும் இந்த உயிர் தேவையில்லை எனப் புலம்பியவளிடம், காரணம் கேட்ட சீதாவிற்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.  அவள் கணவனுக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாகவும், அவனின் சிகிச்சைக்கு தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் குழந்தையை விற்று, சிகிச்சைக்கு அளித்ததாகவும் கூறினாள். மேலும் சிகிச்சை பலனின்றி கணவன் தவறிவிட்டதா...

சீதையின் பூக்காடு - 19

Image
அத்தியாயம் 19 பொதுவாக மனித உயிர்களை கையாள தகுதி உள்ளவர்கள் மட்டுமே வேண்டும் என்பதால், மருத்துவப் படிப்பில் இறுதி ஆண்டில் பெருமளவு மாணவர்களை வடிகட்டி விடுவார்கள். எனவே இறுதி ஆண்டுத் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். அதில் சீதா இரண்டு தேர்வுகளில் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றிருந்தாள். எனவே இரட்டிப்பு மகிழ்ச்சியோடு வழக்கம் போல் செலின் மேடமை சந்தித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டாள்.  பள்ளியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டார்கள் அல்லவா? ஏனோ இந்த முறை அவரை சந்திக்கையில் அவரின் உளநிலைக் குறித்து சீதாவின் மனதில் சிறு சந்தேகம் நெருடியது.  வழக்கம் போல் தன் தந்தையுடன் சந்திக்க வந்திருந்தவளை இன்முகத்துடன் வரவேற்றார் செலின்.  "வாங்க சர்! சீதாம்மா, ஏதோ ஹேப்பி மெசேஜ் கொண்டு வந்திருக்கா போலவே? சம்திங் லைட் ஸீம்ஸ் ஆன் ஹர் ஃபேஸ்!" என்று சீதாவின் விரிந்த புன்னகை முகத்தைப் பார்த்தவாறே கூறினார். "ஆமா மேடம்! உங்க சீதாம்மா டாக்டர் ஆகிட்டா. ரெண்டு சப்ஜெக்ட்ல யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்!" "இஸ் தட் சோ? சந்தோஷம்! சந்தோஷம்! என் ஸ்டூடண்ட் ...

சீதையின் பூக்காடு - 18

Image
அத்தியாயம் 18 அந்த பத்திரிக்கை தன் தலைப்பு செய்தியாக, 'குழந்தைக் கடத்தல்! பின்புலத்தில் ****கட்சி தொண்டர்!!' என்று கூறியதை உரக்கப் படித்து விட்டு நிமிர்ந்தார் வித்யாலட்சுமி. ரகுநந்தனின் ஒரே ஒரு மனைவி. சீதாலட்சுமியின் பாசமிகு அன்னை.  "நீங்க தைரியம்ங்கற பேர்ல இப்டி குருட்டாம்போக்குல விடறதுனால தான் இவ இப்ப கட்சி ஆளுங்களை எல்லாம் பகைச்சிக்கிட்டு வந்து நிற்கறா!" என்று சீதாவின் செயலிற்கு, அவளுக்கு அனைத்திற்கும் துணை போகும் கணவரிடம் தன் கண்டனத்தைத் தெரிவித்தார் வித்யா. "ம்மா! இவனை மாதிரி ஆளுங்களால எத்தனை அம்மாக்கள் தங்களோட பிள்ளைங்களைத் தொலைச்சிட்டு தவிப்பாங்க தெரியுமா?" - சீதா. "ஊர்ல உள்ள பிள்ளைங்களைப் பார்த்துட்டு இருந்தா என் பொண்ணை யார் பார்க்கறது? இவன்கிட்ட இருந்து அவன், அவன்கிட்ட இருந்து அடுத்தவன்னு சங்கிலி தொடரா இருக்க இந்த ஆபத்தான வேலைல, எங்கயாவது ஒரு இடத்துல உனக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா நான் என்னடி பண்ணுவேன்?"  "வித்யா! அதான் எதுவும் ஆகலையே? சரியான நேரத்துக்கு தான் நான் போய்ட்டேனே? உன் பொண்ணு மேல உனக்கிருக்கற அக்கறையும், பயமும் எனக்கிருக...

ஸ்கார்பியோ காதல் - 13.2

Image
அத்தியாயம் 13.2 அவனுக்கு ஆறுதலாக அருகே அமர்ந்து கைப்பிடித்துக் கொள்ள நினைத்தவள், உள்ளத்தையடக்கி வார்த்தையால் அவனை வருடினாள். “சர்… ஐ க்நோ இட்’ஸ் யோர் டிஃபிகல்ட் டைம். ஆனா நீங்க கடந்து வரணும்! வாங்க சர்! ஐ’ம் ஹியர் டூ ஹெல்ப் இன் எனி வே ஐ கேன்.” என்றவளை நிமிர்ந்து பார்த்தான்.  இறை தூதாய் வந்தவள் போல் தெரிந்தாள் அம்ருதா. ஒரு க்ஷணம் அவளையும் தான் கொல்லத்தான் போகிறோம் என்பதை மறந்துதான் போனான் அஸ்வத். “அன்னிக்கு அந்தக் காட்டுல கார்ல தூங்கிட்டு இருக்க மாதிரி இருந்த பேபியோட முகம் இன்னும் என் தூக்கத்தைக் கெடுக்குது. நான் ரிஸ்க் எடுத்து உங்க வீடு வரை வந்திருக்கறது கூட அதனாலதான்! ப்ளீஸ்… கன்ட்ரோல் யோர்ஸெல்ஃப்! உங்க அம்முக்குட்டியோட இழப்புக்கு ஜஸ்டிஃபை பண்ண வேணாமா? அதுக்காகவாவது கடந்து வாங்க சர்…” அம்ருதா குரல் வழியே இதமாய் அஸ்வத்தைத் தழுவினாள். அன்றும் இவள்தான் அவனுக்கு வாழ வேண்டுமென்ற எண்ணத்தை விதைத்தாள். இன்றும் அவன் துயர் துடைக்க சுக வார்த்தைகளை மடித்து நீட்டுகிறாள். ‘பாஸிட்டிவிடி பேக்கேஜ்!’ எனச் சொன்னது சாலச்சிறந்ததே என்று தோன்றியது. தன்னிலை அடைந்த அஸ்வத் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்த...