Skip to main content

Posts

Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 31

அத்தியாயம் 31 தன் தோழர்கள் தன்வீரும் தாரகேஷூம் அநியாயமாய்(?), அகாலமாய் மாண்டு போன சோகத்தில், தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்த கோகிலாவிற்கு பழிவெறி உச்சத்தில் இருந்தது. அதே கோபத்தில் நேற்றிரவு அம்ருதாவிற்கு அழைத்தவள், காலையில் சந்திக்கலாமா என்று கேட்க, அம்ருதா எச்சரிக்கையுடன் முன்பு கேட்டதைப் போல் தங்களது ஆராய்ச்சிக்கான உதவியைப் பற்றியே பேசினாள். “இதுக்கு மேலேயும் பொய் வேணாமே மிஸ். அம்ருதா? எல்லாம் எனக்கு தெரியும். நீங்களும் அந்த அஸ்வத்தும் ஆல்ரெடி ஃப்ரெண்ட்ஸ்! ஆம் அ ரைட்?” “எ எந்த அஸ்வத்?” “ஓ கமான் கேர்ள்! அவனுக்காக தான் அவன் குழந்தையைப் பத்தின கேஸ் ஃபைல் கலெக்ட் பண்றதுக்காக என்னைக் கண்டுபிடிச்சு வந்த நீ! எப்டி கண்டுபிடிச்சீங்கன்னுலாம் எனக்குத் தேவையில்லை. இப்போ உங்களுக்கு வேண்டியது எவிடென்ஸ்! அதை நான் கொடுக்கறேன்.” என்றிட, அம்ருதாவிற்கு அப்போதும் நம்பிக்கையில்லை. கோகிலாவின் இந்த திடீர் மாற்றத்தில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என்றெண்ணி அப்போதும் ஏதும் தெரியாதது போலவே தான் பேசினாள்.  ஆனால் தாரகேஷின் அப்பா அஸ்வத்திற்கு நாள் குறித்துவிட்டார் என்றும், தன் தோழர்கள் தன்வீர் மற்றும்...

ஸ்கார்பியோ காதல் - 30

  அத்தியாயம் 30 அம்ருதாவை அடித்தப் பின்னும் கோபம் குறையாமல் மறுபக்கம் திரும்பி, இடையில் கை வைத்து, கீழே கிடந்த கல்லை உதைத்துத் தள்ளி தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினான் அஸ்வத்.  தேவாவுடன் அவர்களைப் பார்த்தவாறு வந்த ஹரிஷ், “என்ன செஞ்ச அம்மு?” எனக் கேட்டவன், பதிலை எதிர்பாராமல் அஸ்வத்தைத் தன்புறம் திருப்பி, “அவ என்ன செஞ்சிருந்தாலும் அவளை அடிக்கற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?” என்று முஷ்டியை மடக்கி அவன் முகத்தில் குத்த போக, “அண்ணா ப்ளீஸ்…” அவனைத் தடுத்து இருவருக்கும் இடையே வந்து நின்றாள் அம்ருதா. “எல்லாம் நீ கொடுக்கற இடம் அம்மு! யாரோ எவனோ எப்டி போனா உனக்கென்ன?” என்று பல்லைக் கடிக்கையில், அம்ரு மீது அஸ்வத்தின் பார்வை மாற்றத்தைக் கண்டுவிட்டு தன்னை நிலைப்படுத்தினான் ஹரிஷ். ஹரிஷ் அம்ருதாவின் அருகே இருக்க, அதிலும் அவனின் அம்மு என்ற அழைப்பு வழக்கம்போல அஸ்வத்தின் உளநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இது அதற்கான நேரமல்ல! அஸ்வத்தை உடனடியாக அமைதிபடுத்தியாக வேண்டும்! அதனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான் ஹரிஷ். என்னதான் காதலை வெளிப்படுத்தியிருந்தாலும், சற்றுமுன் நிகழ்ந்த அந்நிகழ்வினை அஸ...

ஸ்கார்பியோ காதல் - 29

அத்தியாயம் 29 இரவில் வேலை முடிந்த பின்னும் அண்ணனை அழைக்காமல், மருத்துவமனையிலேயே இருந்தாள் அம்ருதா. குழந்தைகள் நல பிரிவின் டியூட்டி அறையின் ஜன்னலோரம், நாற்காலியில் கால்களை நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டு அதில் கன்னம் சாய்த்து அமர்ந்திருந்தாள். நாசி அவ்விடத்தின் மருந்து வாசனைக்கு பழகிப்போயிருக்க, பார்வை வெளியே அசைந்தாடும் வேம்பின் இலைகளைப் பற்றியிருந்தது. வெளி விளக்கின் வெளிச்சம் அவள் முகத்தில் ஓவியக்கோடுகள் வரைந்திட, அவளின் மனோரதம் அஸ்வத்தையே விரட்டிக் கொண்டிருந்தது. ஹரிஷ் அவனின் உளநிலை குறித்து சொன்னதிலிருந்து, அஸ்வத் அவன் மகளுக்கு நிகரான… இல்லை! அதையும் விட ஆழமானக் காதலை, அன்பைத் தேக்கி வைத்திருக்கும் இடத்தைத் தனக்கு தந்திருக்கிறான் என்று பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இருந்தும் இவளை, இவள் காதலை மறுதலித்துள்ளான்.  அதுவும் ஏனாம்? அவனுக்கு துரோமிழைத்த ரேவதியை மறக்க முடியவில்லையாம்! இவளை என்ன இவளிடம் ஊசி போட்டுக்கொள்ள அழும் குழந்தை என்று நினைத்துவிட்டானோ! அஸ்வத் அப்படி பதறாமல் பொய்யுரைத்ததிலிருந்து அவன் ஏற்கனவே இந்த நிராகரிப்பு நாடகத்திற்கு தயாராகியிருக்கிறான் என்று தெரிகிறது. தன் பிடிவ...

ஸ்கார்பியோ காதல் - 28

அத்தியாயம் 28 அன்றொரு நாள் அம்ருதா தன்னிடம் தவறவிட்ட மோதிரத்தை இரு விரல்களில் பிடித்து வெறித்தவாறு படுக்கையில் சாய்ந்திருந்தான் அஸ்வத். மனத்தின் ரணம் விநாடிக்கு விநாடி கனமேற்றிக் கொண்டே வர, வலியில் நெஞ்சம் பிளந்து போகுமோ என்றஞ்சினான். மீண்டும் உறக்கமற்ற இரவு; இரக்கமற்ற இருள்! அழவில்லை; ஆனால் முகம் கன்றி சிறுத்திருந்தது.  யாருக்கும் இரண்டாவது காதல் வரலாம். ஆனால் ரேவதியின் ஆசையைக் கொன்று, அவள் மூலம் கிடைத்தப் பொக்கிஷமொன்றைத் தொலைத்து நிற்கும் சபிக்கப்பட்ட தனக்கு வரலாமா? அது அறமாகுமா? ஆசாரமாகுமா? தர்மம் தானா? நியாயத்தராசில் ஏற்றக் கூட தகுதியுண்டா? இல்லையாம்! நியாயமேயில்லை; தகுதியேயில்லை என்று இவன் விழியின் தகிப்பை வருடி தண்மையைத் தந்த தேவதைப் பெண்ணொருத்தியின் அண்ணன்காரன் சொல்லிவிட்டான். சற்றுமுன், அம்ருவுடன் பேசிவிட்டு அறைக்குள் சென்ற ஹரிஷிற்கு, தங்கை தன் பேச்சையும் மீறி அஸ்வத்திற்கு அதீத முக்கியத்துவம் தருவதில் நெஞ்செல்லாம் எரிந்தது. எரிச்சலை அடக்கும் வகையறியாத அந்த மனநல மருத்துவன் தன் ஆற்றாமையை இறக்கி வைக்க வேண்டி, இரவென்றும் பாராமல் அஸ்வத்திற்கு அழைத்தான். தூங்காமல் தன் அடுத்த இலக்...

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...