Posts

கருவறை கீதம் -31

Image
  அத்தியாயம் 31  பூ ச்செடிகளுக்கானக் கட்டிலிருந்து சிறிய கல்லொன்று உருண்டு விழுந்ததையடுத்து, அண்ணன், தம்பி இருவரும் திரும்பிப் பார்க்க, இருளில் இருந்து மெல்ல வெளிச்சத்திற்கு வந்தாள் அனுராதா.  மீண்டும் அக்னியை அருகே ஒருமுறை கண்டுவிட்டால் இன்றிரவு தூக்க மாத்திரைக்கு வேலை வைக்காமலும் கணவனைத் தொந்தரவு செய்யாமலும் நிம்மதியாக தூங்கிவிடலாம் என்று தோன்றவே, அர்ஜூனுக்கு சந்தேகம் வந்து விடாதபடி இருவருக்கும் கற்கண்டு பால் எடுத்துக்கொண்டு வந்திருந்தாள் அவள். வந்தவள் அர்ஜூனின் கடைசி உரையாடலை மிகத் தெளிவாகக் கேட்டிருந்தாள்.  அப்போதுதான் பிடிமானத்திற்காகக் கை வைக்க, அங்கிருந்த கல்லொன்று உருண்டோடி வந்து, அந்த நிசப்தப் பொழுதில் அவள் மக்களின் கவனத்தைக் கலைத்தது. அம்மாவைக் கண்டதும் அர்ஜூன் சாந்தமான பார்வையுடன் அப்படியே நிற்க, “ம்மா!” எனப் பதற்றத்துடன் அவளருகே ஓடி தள்ளாடியவளைப் பிடித்திருந்தான் சஞ்சய். “சஞ்சு!” கண்ணீர் தளும்பிய கீச்சுக்குரல் மிகமிக மெலிதாக ஒலித்தது. அம்மாவின் குரலில் தன்‌ பெயரைக் கேட்டவன் புன்னகைக்க முயன்றபடி, “எஸ்ம்மா! உன் சஞ்சு!” என்றான் இயல்பாக!  நடுக்கம் கொண்டிருந்த அவள் கையிலிருந்து த

கருவறை கீதம் -30

Image
  (Next UD is on Wednesday.) அத்தியாயம் 30 “நா ன் சொன்னது என்னாச்சு?” “டன்!”  “தாங்க்ஸ்.” என்று அலைப்பேசியை முடக்கிய அக்னிஸ்வரூபன் பெற்றோரின் அறைக்குச் சென்று நிரஞ்சனாவிடம், “போகலாம்மா!” என்றான்.  இன்று காலையில்தான் திருமண வரவேற்பு நடந்து முடிந்திருந்தது. மாலையில் தேனிலவிற்கு புது ஜோடியை ஹவாய் தீவிற்கு அனுப்பியிருந்தான் அக்னி. அவ்வளவு தான்! இனி நாளைக் காலை பிரகதிக்காக ஜோஜூவிடம் பார்த்து வைத்திருந்த வீட்டை அனைவருடனும் போய் பார்த்து, பேசி முடித்துவிட்டு, நாளை மாலை புறப்பட்டு தாங்களும் ஊர் போய் சேர வேண்டியதுதான் என்று நினைத்திருக்கையில், அனுராதா இவர்களைத் தங்கள் வீட்டிற்கு வரவேண்டுமென வற்புறுத்தி அழைத்தாள். இடைப்பட்ட நாட்களில் நிரஞ்சனாவுக்கும் அனுவுக்கும் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு நல்ல நட்பு உருவாகியிருந்தது. பிரபஞ்சனும் பாஸ்கரனும் தான் ஏற்கனவே பெயர் சொல்லி அழைக்குமளவிற்கு பழகியிருந்தனரே! அதன்பொருட்டு தான் அனு இவர்களை வீட்டிற்கு அழைத்திருந்தாள். நிரஞ்சனா தன் மாமியார் அபிராமியிடம், “மாப்பிள்ளையோட அம்மாவை விட என்னால அனுகிட்ட ஈஸியா இன்ட்ராக்ட் ஆக முடியுது அத்தை! ஷீ இஸ் இன்னஸென்ட் அண்ட் கை

கருவறை கீதம் 29

Image
  அத்தியாயம் 29 அ க்னிஸ்வரூபனைத் தொழில் ரீதியான வேலைகள் இழுத்துப் பிடித்தது. அவன் இல்லாமல் ஒரு மாதம் வரை வேலைகள் தங்குதடையின்றி நடந்தேற ஆவண செய்துவிட்டு தான் வந்திருந்தான். ஒரு பெரிய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்திருக்க, அதற்கான உற்பத்தி வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இவன் இல்லாத நேரத்தில் வேறொரு பிரச்சினையைக் கொண்டு வந்த போட்டி நிறுவனம் ஒன்று உள்ளே வந்து தகராறு செய்ததன் காரணமாக, உற்பத்தி வேலைகள் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தகவல் வர இவன்‌ போயே ஆக வேண்டிய நிலை! நாளை மறுநாள் திருமணம் என்ற நிலையில், பெங்களூர் சென்றுவிட்டு வேலை முடிய உடனேயே திரும்பி விடுவதாக அவினாஷ், அர்ஜூன் உட்பட முக்கிய ஆண்கள் சிலரிடம் மட்டும் சொல்லிவிட்டு புறப்பட்டு போய்விட்டான். இங்கே கல்யாண வேலைகள் அனைத்தும் தரமான, சிறந்த நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததால் கல்யாண வீட்டுக்காரர்கள் இலகுவாக இருக்க முடிந்தது. அன்று மாலை மண்டப அலங்கார தீம்-ற்கு ஏற்றாற் போல் தங்க நிற நீண்ட பாவாடையில், டிஷ்யூ ரக தாவணியின் மடிப்புகள் பின்னிடையில் செருகப்பட்டிருக்க, சீக்வென்ஸ் கற்கள் பதித்த ஃபேன்ஸி க்ராப் டா

கருவறை கீதம் -28.2

Image
  அத்தியாயம் 28.2 அக்னி பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான். அவள் சஞ்சுவின் மனைவி என்ற போது மகிழ முடியவில்லை. எனக்காக இத்தனை வருடங்கள் இவள் காத்திருக்கிறாள் என்று புளங்காகிதமடைய முடியவில்லை. மாறாக கலியபெருமாள், அனு, அர்ஜூன், நிர்மலா என அனைவரின் மீதும் பொல்லாத கோபம் வந்தது. கலியபெருமாள் இவன் மேல் நடத்திய துன்புறுத்தல் ஒருவிதம் என்றால், சின்னப் பெண்ணான சந்தனாவிடம் சஞ்சுவின் எண்ணங்களை விதைத்ததும் ஒருவித கொடுமை என்றே நினைத்தான். இதில் அனுவும் தன்னை அறியாமலேயே சம்பந்தப்பட்டிருப்பதில் இவனுக்கு ஆற்றாமை பொங்கியது. அர்ஜூன், ‘வேறு மாப்பிள்ளை, டிராமா’ என்றதன் அர்த்தமும் இப்போது புரிந்தது.  “இதனால தான் அர்ஜூன் உன்னை அண்ணின்னு கூப்பிடறானா?” “ஹாஹா… அவனுக்கு ஏதாவது வேலை ஆகணும்னா என்கிட்ட தான் வருவான். அப்போ நான்தான் சொல்லுவேன், அண்ணின்னு கூப்பிட்டா ஹெல்ப் பண்றேன்னு!” சந்தனா அர்ஜூனை விட நான்கு மாதங்கள் சிறியவள்! இருப்பினும் அவளின் ஆணையின் பேரில் தனக்கு காரியம் ஆகவேண்டும் என்ற சமயங்களில், அவள் கோபமாக இருக்கும்போது என சிற்சில நேரங்களில் அவன் அவ்வாறே அழைக்கின்றான்.  “இன்னும் ரெண்டு, மூணு வாரத்துல சஞ்சுவைக்